30.
குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்
துட்டவிக
டக்கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும்நற் கவியை மெச்சார்
துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்
தூயரைத் தள்ளிவிடுவார்
இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்
பென்னிலோ போய்ப்பணிகுவார்;
ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்
நன்றாக வேபே சிடார்;
நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு
நன்மைபல வேசெய் குவார்;
அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அத்தனே - தலைவனே!, அருமை ............ தேவனே!,
யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் - எல்லோரும் தீய விகடக்
கவிஞனைப் புகழ்வார்கள், சொல்லும் நல் கவியை மெச்சார் - புகழ்ந்து
கூறத்தக்க நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள், துர்ச்சனருக்கு அகம்
மகிழ்ந்து உபசரிப்பார் - தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்,
தூயரைத் தள்ளி விடுவார் - நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள், இட்டம்
உள தெய்வந்தனைக் கருதிடார் - விருப்பமான தெய்வத்தை நினையார்,
கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் - பேய் என்றாற் சென்று
வணங்குவர், ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் - பெற்றோர்களைச்
சிறிதும் மதிக்கமாட்டார், வேசை என்னிலோ காலில் வீழ்வார் -
பரத்தையென்றாற் காலில் விழுந்து
|