பக்கம் எண் :

55

சோம்பாத தலைவரில் லாததே வளமுடன்
     சொல்லுயர் சபாசூ னியம்!
  தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே
     சுத்தசூ னியமென் பர்காண்!
ஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த
அத்தனே - யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய
தலைவனே!, அருமை .......... தேவனே!, தாம்பூல தாரணம் இலாததே
வருபூரண சந்திரன் நிகர்முக சூனியம் - தாம்பூலம் தரித்துக்கொள்ளாமல்
இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், சற்சனர்
இல்லாததே வெகுசனம் சேர்ந்து வாழ்தரும் பெரியநகர் சூனியம் -
நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப்
பாழாகும், மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க
தேசச்சூனியம் - உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது
பெரிய நாட்டுக்குப் பாழாகும், மிக்க சற்புத்திரன் இலாததே நலமான
வீறுசேர் கிருக சூனியம் - சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய
பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், சோம்பாத தலைவர் இல்லாததே
வளமுடன் சொல்உயர் சபாசூனியம் - ஊக்கமுடைய தலைவர்கள்
இல்லாமையேசெழிப்புடன் செப்பப்படுகின்ற அவைக்குப் பாழாகும்,
தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே சுத்தசூனியம் என்பர் -
பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே
பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.

     (வி-ரை.) ஆம்பல் - யானை. வதனம் (வட) முகம். சற்சனர் x
துர்ச்சனர். சூனியம் - பாழ். தாம்பூலத்திற்கு முகவாசம் என்று பெயர்.
தொன்மை + உலகு : தொல்லுலகு.