துதிபரவும்
இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய்ம றைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத் தணிமுடி
துளக்கிடும் கால மென்பர்!
அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்
கரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.)
தோகையோர்
பாகனே - மயில் (போலும் உமாதேவியார்)
ஒரு பங்கிலுள்ளவனே!, அதிகம்உள பல தேவர் தேவனே - கூட்டமாக
உள்ள பலவகைப்பட்ட வானவர்க்கும் வானவனே!, தேவர்கட்கு அரசனே
- வானவர் தலைவனே! அருமை ......தேவனே!, சதுர்யுகம் ஓர் இரண்டாயிரம்
பின்படின் சதுமுகற்கு ஒருதினமதாம் - (கிரேதாயுகம், திரேதாயுகம்,
துவாபரயுகம், கலியுகம் என்னும்) நான்கு கொண்ட யுகங்கள் இரண்டாயிரம்
கடந்தால் நான்முகனுக்கு ஒரு நாளாகும். சாற்றும் இத்தினம் ஒன்றிலே
இந்திர பட்டங்கள் தாமும் ஈரேழ் சென்றிடும் - கூறத்தக்க இந்த ஒரு
நாளிலே பதினான்கு இந்திர பதவிகள் கழிந்துவிடும், மதிமலியும்
இத்தொகையின் அயன் ஆயுள் நூறுபோய் மாண்டபோது ஒருகற்பம்
ஆம் - அறிவுமிகுந்த இந்தக் கணக்கின்படி நான்முகன் வயது நூறு கழிந்து
இறந்தானானால் ஒரு கற்பம் எனப்படும், மாறிவரு கற்பம் ஒருகோடி
சென்றால் நெடியமால் தனக்குஓர் தினமதாம் - (இவ்வாறு) மாறிமாறி வரும்
பிறமகற்பம் ஒருகோடி கழிந்தால் திருமாலுக்கு ஒரு நாளாகும், துதிபரவும்
இத்தொகையில் ஒருகோடி நெடியமால் தோன்றியே போய் மறைந்தால் -
துதிக்கத்தகுந்த இந்த எண்ணிக்கையில் ஒரு கோடி திருமால்கள் பிறந்து
மறைந்தால், நீ நகைத்து அணிமுடி துளக்கிடும் காலம் என்பர் - நீ சிரித்து
அழகிய திருமுடியை ஒருமுறை அசைக்கும் காலம் ஆகும் என்று அறிஞர்
கூறுவர்.
|