41.
தூய்மை
வாம்பரி
தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;
மறையவர்க் குயர்பு னிதமோ
மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு
மாசில்முற் புறம்அ தனிலே;
மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;
மிக்கமட மாத ருக்கோ
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
மேவுவனி தையர்த மக்கும்
தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
தங்கம்ஈ யந்த மக்கும்
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
சாரும்மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
மாமேரு வில்லியே - பெருமைமிக்க மேருவை
வில்லாக்கியவனே!, அனகனே - குற்றம் அற்றவனே!, அருமை ........தேவனே!,
வாம் பரிதனக்கு முகமதனிலே அதிக புனிதம் - தாவிச்செல்லுங் குதிரைக்கு
முகத்திலே மிகுதூய்மை, மறையவர்க்கு மலரடியிலே உயர் புனிதம் -
மறையுணர்ந்த அந்தணர்க்கு மலரனைய அடிகளிலே மிகுதூய்மை, ஒளிகொள்
கண்ணாடிக்கு மாசுஇல் முற்புறம் அதனிலே புனிதம் - ஒளியையுடைய
கண்ணாடிக்குக் குற்றமற்ற முன்புறத்திலே தூய்மை, மேம்படும் பசுவினுக்குப்
பிற்புறத்திலே - உயர்ந்த ஆவுக்குப் பின் புறத்திலே (தூய்மை), மிக்கமட
மாதருக்கு மேனியெல்லாம் புனிதம் ஆகும் - சிறந்த இளம்பெண்களுக்கு
மெய்யெல்லாம் தூய்மையாகும், ஆசௌசமொடு மேவும் வனி
|