பக்கம் எண் :

66

தையர் தமக்கும் - தீட்டுற்ற (பூப்படைந்த) பெண்களுக்கும், தாம்பிரம்
அதற்கும் - தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம்
தமக்கும் - அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், பு
னிதம் தரும் - தூய்மையைத் தருகிற,
வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை
புனிதம் ஆம்என்பர் - வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும்
சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.

     (வி-ரை.) ‘வாவும்பரி' ‘வாம்பரி' என இடைக்குறைந்தது. வாவுதல் -
தாவுதல். ஆசௌசம் : தீட்டு.

     (க-து.) சில பொருள்களை இங்குக் கூறியவாறு தூய்மை செய்தல்
உலகியல்.

   42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
     கோத்துவச விர்த்தி கொள்வார்;
  குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்
     கொண்டுவச விர்த்தி கொள்வார்;
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
     பற்றிவச விர்த்தி கொள்வார்;
  பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
     பழக்கிவச விர்த்தி கொள்வார்;
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
     வீசிவச வீர்த்தி கொள்வார்;
  மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
     விலக்கிவச விர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
     தையனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!