|
(இ-ள்.)
அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்து ஐயனே -
திருவடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரனைய திருவடியை
உடைய தலைவனே!, அருமை ...... தேவனே!, கொடிய பொலி எருதை
இருமூக்கிலும் கயிறுஒன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் -
கொடுந்தன்மையுள்ள பொலிகாளையை (அதன்) இரண்டு மூக்கிலும் ஒரு
கயிற்றைக் கோத்து வசப்படுத்துவர், குவலயந்தனில் மதக்களிறதனை
அங்குசம்கொண்டு வசவிர்த்தி கொள்வார் - உலகத்தில் மதயானைகளை
அங்குசங்கொண்டு (தாக்கி) வசப்படுத்துவர், படியில்விட அரவை மந்திர
தந்திரத்தினால் பற்றி வசவிர்த்தி கொள்வார் - உலகில் நஞ்சுடைய நாகத்தை
மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர், பாய்பரியை நெடிய
கடிவாளமது கொடு நடைபழக்கி வசவிர்த்தி கொள்வார் - தாவும் குதிரையை
நீண்ட கடிவாளத்தைக்கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர், விடம்உடைய
துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு வீசி வசவிர்த்தி கொள்வார் -
நஞ்சுடைய தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர், மிக்க
பெரியோர்களும் கோபத்தை அறிவால் விலக்கி வசவிர்த்தி கொள்வார் -
பெரிய சான்றோர்களுங்கூடத் (தம்) கோபத்தை அறிவின் திறமையினால்
நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து (மனத்தை) வசப்படுத்துவர்.
(க-து.)
எருது முதலானவற்றை வசப்படுத்த இங்குக் கூறிய முறையைக்
கையாளுதல் உலகியல்.
|
43.
ஒளியின் உயர்வு
செழுமணிக்
கொளி அதன் மட்டிலே! அதினுமோ
செய்யகச் சோதம் எனவே
செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
தீபத்தின் ஒளிஅ திகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப
ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!
|
|