பக்கம் எண் :

100குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது
 வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
   வெள்ளநீ ராடியருளே.    
(2)

86.
பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் றிருமேனி
   பாசொளி விரிப்பவந்தண்
பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப்
   பருமுத்த மரபதமதாய்த்

தண்ணாறு மல்லற் றுறைச்சிறை யனங்களி
   தழைக்குங் கலாமஞ்ஞையாய்ச்
சகலமு நின்றிருச் சொருபமென் றோலிடும்
   சதுர்மறைப் பொருள்வெளியிடக்

கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங்
   களபமுங் கத்தூரியும்
கப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியும்
   காளிந்தி யுங்கங்கையாம்

விண்ணாறு மளவலாய் விளையாடு புதுவைகை
   வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி    
   வெள்ளநீ ராடியருளே.    
(3)

    (4) வேகவதி - வைகையாறு.

    86. (அடி, 1-2) அம்பிகையினது திருமேனியின் மரகதச் சோதியால் எல்லாப் பொருள்களும் பச்சைநிறம் பெற்றன வென்பர்.

    பாசொளி - பச்சை ஒளி. (பி-ம்.) ‘பாசொளி பரப்ப.’ பவளக் கொடி நீராடுந் துறையிலுள்ளது. கலாமஞ்ஞை:7. தேவியின் பச்சையொளியால் யாவும் பசிய நிறம் அடைதல் (தக்க. 166.) ‘ஸர்வம் சக்தி மயம்’ என்பது வேதத்தின் கூற்றென்பர்; “அனைத்துந்தன் மயமெனுஞ் சுருதிகரி யாவைத்தும்” (361); தக்க. 116, உரையையும், விசேடக் குறிப்பையும் பார்க்க.

    (3-4) குடம் போன்ற கொங்கை. செங்களபம் - செஞ்சந்தனக் குழம்பு. கத்தூரி கருநிறமுடையது. கப்புரம் - பச்சைக் கருப்பூரம்; “கப்புரப் பசுந்திரை”. (சீவக. 197.) வாணி - சரஸ்வதி நதி; இது செந்நிறமுடையது. காளிந்தி - யமுனை; இது கருநிறமுடையது. கங்கை வெண்ணிறமுடையது. அளவலாய் - கலந்ததை ஒத்து. (பி.ம்.) ‘அளவலாய்’. வைகை செஞ்சந்தனக்குழம்பால் வாணி நதியையும். கத்தூரியால் யமுனை