பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்101

87.
தூங்குசிறை யறுகா லுறங்குகுழ னின்றுணைத்
   தோழியர்கண் மேற்குங்குமம்
தோயும் பனித்துறைச் சிவிறிவீ சக்குறுந்
   துளியெம் மருங்குமோடி

வாங்குமலை வில்லியார் விண்ணுரு நனைத்தவர்
   வனைந்திடு திகம்பரஞ்செவ்
வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடு
   மஞ்சள்விளை யாடலேய்ப்பத்

தேங்குமலை யருவிநெடு நீத்தத்து மாசுணத்
   திரள்புறஞ் சுற்றியிருப்பச்
சினவேழ மொன்றொரு சுழிச்சுழல்வ மந்தரம்
   திரைகடன் மதித்தன்மானும்

வீங்குபுனல் வைகைத் தடந்துறை குடைந்துபுது
   வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
   வெள்ளநீ ராடியருளே.    
(4)

88.
துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடு
   துறையிற் றுறைத்தமிழொடும்
தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி யெனுந்துணைத்
   தோழிமூழ் கிப்புனன்மடுத்  

யையும், பச்சைக் கருப்புரத்தால் கங்கையையும் ஒத்தது. புது வைகை; புதுமை நீருக்கு அடை. (பி - ம்.) ‘வைகைபுது வெள்ள நீர்’.

    87. (அடி, 1) தூங்கு சிறை - செறிந்த சிறகுகள்; “தூங்கிருள்” (சீவக. 310). அறுகால் - வண்டு. குழல் - குழலையுடைய நீ. குங்குமம் - குங்குமம் கலந்த நீரை; பெருங் 1.41; 17 -18. துறையிற் சிவிறியால் வீச; சிவிறி - நெடுந்துருத்தியென்னும் நீர் வீசு கருவி.

    (2) மலை வில்லியார் - சிவபெருமான். விண்ணுரு - ஆகாயமாகிய திருவுருவம் (81, 83, 89) திகம்பரம் = திக் அம்பரம் - திசையாகிய ஆடை. அது நனைதலாவது வெளி முழுவதும் நீர்த்துளி செறிதல். மஞ்சள் விளையாடல் - திருமணக் காலத்தில் ஒருவர்மேல் ஒருவர் மஞ்சள் நீரை வீசி விளையாடுதல்.

    (3) (பி.ம்.) ‘மழையருவி’ மாசுகணம் - பெரும்பாம்பு. ஒரு சுழிச் ச்ழல்வ - ஒரு சுழியின்கண் சுழலுதல். (பி - ம்.) ‘சுழிச்சுழலன்’ யானைக்கு மந்தரமலை உவமை.

    88. (அடி, 1) துறைத் தமிழ்; 62. கலைக் கொடி - கலைமகள். புனல் மடுத்து - நீரிற் புகுந்து.