பக்கம் எண் :

102குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தொளிக்கும் பதத்துமற் றவளென வனப்பெடையை
   ஓடிப் பிடித்தம்மை
ஒண்பரி புரத்தொனியு மடநடையும் வௌவின
   துணர்ந்துபின் றொடர்வதேய்ப்ப

நெளிக்குந் தரங்கப் பெருங்கங்கை யுடனொட்டி
   நித்திலப் பந்தாடவும்
நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன்
   நெடுந்திரைக் கையெடுத்து

விளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வைகைநெடு
   வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவரக்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
   வெள்ளநீ ராடியருளே.    
(5)

வேறு
89.
துங்க முலைப்பொற் குடங்கொண்டு
   தூநீர் நீந்தி விளையாடும்
துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற்
   சுண்ண மெறிய வறச்சேந்த

அங்கண் விசும்பி னின்குழற்காட்
   டறுகாற் சுரும்ப ரெழுந்தார்ப்ப
தையன் றிருமே னியிலம்மை
   அருட்கட் சுரும்பார்த் தெழன்மானச்

    (2) பதத்து - சமயத்தில். மற்று; அசைநிலை. அவளென - அக்கலைமகளென்று எண்ணி. அனப்பெடையைப் பிடித்து: பிடிப்பவள் அம்பிகை. (பி - ம்.) ‘அனப்பேடை யோடிப். பரிபுரத்தொனி - சிலம்பொலி. அன்னத்தின் ஒலி அம்பிகையின் சிலம்பொலிக்கும், அதன் நடை அவள் நடைக்கும் உவமை (53.)

    (3) (பி -ம்.) ‘தரங்கத் தடங்கங்கை’. ஒட்டி - பந்தயம் கூறி. திரையாகிய கை.

    (3 -4) கங்கையை விளிக்கும்.

    89. (அடி, 1) நகிலாகிய குடம். குடத்தைத் தழுவிக் கொண்டு நீந்துதல் வழக்கம் (100.) எறிய - அநம்பிகை எறிய. அறச் சேந்த - முற்றும் சிவந்த.

    (2) ஐயன் திருமேனி - ஆகாயம் (81, 83, 87.)