பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்103

செங்க ணிளைஞர் களிக்காமத்
   தீமூண் டிடக்கண் டிளமகளிர்
செழுமென் குழற்கூட் டகிற்புகையாற்
   றிரள்காய்க் கதலி பழுத்துநறை

பொங்கு மதுரைப் பெருமாட்டி
   புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
   புதுநீ ராடி யருளுகவே.    
(6)

90.
இழியும் புன்றறண் டுறைமுன்றில்
   இதுவெம் பெருமான் மண்சுமந்த
இடமென் றலர்வெண் கமலப்பெண்
   இசைப்பக் கசிந்துள் ளுருகியிரு

விழியுஞ் சிவப்ப வானந்த
   வெள்ளம் பொழிந்து நின்றனையால்
மீண்டும் பெருக விடுத்தவற்கோர்
   வேலை யிடுதன் மிகையன்றே

பிழியு நறைக்கற் பகமலர்ந்த
   பிரச மலர்ப்பூந் துகண்மூழ்கும்
பிறைக்கோட் டயிரா பதங்கூந்தற்
   பிடியோ டாடத் தேனருவி

    (3) காய்க் கதலி - கதலிக்காய். வாழைக்காயைப் புகையூட்டிப் பழுக்கவைத்தல் வழக்கம;் இது போன்ற பல விஷயங்கள் ‘உத்பலபரி மளம்’ என்னும் வடநூலிற் கூறப்பட்டுள்ளன என்பர். நறை - தேன்.

    (4) பொருநை - தாமிரபன்னி.

    90. (அடி, 1) துறைமுன்றில் இது - துறைப்பரப்பாகிய இது. வெண் கமலப் பெண் - கலைமகள். இசைப்ப - நினக்குச் சொல்ல.

    (2) ஆனந்த வெள்ளம் - உவகைக் கண்ணீர்ப் பெருக்கு - மீண்டும் பெருக விடுத்து - மறுபடியும் நின் கண்ணீரால் வையை நதி பெருகும்படி செய்து. அவற்கு - சோமசுந்தரக் கடவுளுக்கு. ஓர் வேலை யென்றது மண்சுமத்தலை; வேலை - தொழில் (69) மிகையன்றே - மிகையல்லவா.

    3)(பி-ம்.) ‘அயிராவதங்’. துகளில் மூழ்கிய யானை அது போக அருவியாடுதல் இயல்பு.