பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்99

விளையாடு வைகைத் தடந்துறை குடைந்துபுது
   வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
   வெள்ள நீராடியருளே.    
(1)

85.
திரைபொங் கிடுஞ்செங்கை வெள்வளை கலிப்பநகை
   நிலவுவிரி பவளம்வெளிற
நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவறல்
   நெறிகுழற் கற்றைசரியத்

திரைபொங்கு தண்ணந் துறைக்குடைந் தாடுவ
   செழுந்தரங் க்ககங்கைநுண்
சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கடல்
   திளைத்தாடு   கின்றதேய்ப்பக்ச

கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக்
   கழனியிற் கன்னியர்முலைக்
களபக் குழம்பைக் கரைத்துவிட் டள்ளற்
   கருஞ்சேறு செஞ்சேறதாய்

    (4) சிவபெருமான் சுந்தர பாண்டியராகிய பொழுது அம்பிகை தன் அரசையும் கயற்கொடியையும் அவருக்கு அளித்தனள்.

    85. நீராடுதலால் அம்பிகையின் உறுப்புக்களில் உண்டாகும் வேறுபாடுகள் கூறப்படும்.

    (அடி, 1) கலிப்ப - ஒலிக்க. பவளம் - வாயிதழ். நீலக் கருங்குவளை செங்குவளை பூப்ப - கரிய கண்கள் செந்நிறத்தையடைய. அறல் - கருமணல்.

    (2) ஆடுவ - ஆடுதல். சிவபிரானது அளவை நோக்குகையில் கங்கை சிறு திவலையாகு மென்க. ஆனந்த மாக்கடல் - சிவபெருமான். அவர் திருச்சடையில் கங்கை ஒரு திவலைபோல் அடங்கியதாதலின் இங்ஙனம் கூறினார்; “புன்னு னித்தரு பனியென வரந்தி புனிதர, சென்னியிற்கரந் தொளித்தலும்” ( கம்ப. அகலிகைப் 56.) (பி-ம்.) ‘சிறுதுவலை.’

    (1-2) அம்பிகை வையைத் துறையில் ஆடுதலால் உண்டான வேறுபாடுகள் சிவபெருமானோடு அளவளாவுங் காலத்து உண்டாவனவற்றை ஒத்தன; “செய்ய வாய்வெளுப் பக்கண் சிவப்புற, நெற்ற ராக மழியத் துகினெகத், தொய்யின் மாமுலை மங்கையர் தோய்தலால், பொய்கை காதற்கொழுநரும் போன்றதே” ( கம்ப, நீர்விளையாத்துப். 19.) நதித் துறையில் ஆடுதல் கடலில் ஆடியதை ஒத்ததென்றது ஒரு நயம்.

    (3) பணையாகிய கழனி.