பக்கம் எண் :

98குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அள்ளல் வயற்றுயின் மதுரைத் துரைமகள்
   ஆடுக வம்மனையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
   ஆடுக வம்மனையே.    
(10)

9. நீராடற் பருவம்

ஆசிரிய விருத்தம்
84.
வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு
   மறிதிரைச் சங்கோலிட
மதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரள
   மகரந்த முண்டுவண்டின்

கிளையாடு நின்றிருக் கேசபா ரத்தினொடு
   கிளரைசைவ லக்கொத்தெழக்
கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு த்ததமிற்
   கேளிர்க டழீஇக்கொண்டெனத்

தளையாடு கறையடிச் சிறுகட் பெருங்கைத்
   தடங்களி றெடுத்துமத்தத்
தவளக் களற்றினொடு முட்டவிட் டெட்டுமத
   தந்தியும் பந்தடித்து

பேசுதற்கு. விடுப்ப - விடுத்தல். (பி-ம்.) 'முறை முறையா' 'பேசி விடுப்ப’. அம்பிகை அம்மனை யாடுதல் தூது பேச விடுப்பதை யொத்தது.

    (4) அள்ளல் - சேறு. துரைமகள் - அரசி.

    (முடிபு.) பேச விடுப்ப கடுப்ப ஆடியருள் என்க.

    84. (அடி, 1) வளை - கையிலுள்ள சங்கரேகை. பொலன் சங்கு - பொன் வளையல். ஓலிட - முழங்கு. கட்கயல் - கண்ணாகிய கயல். வரிக்கயல்; நீரில் உள்ளது. மகரந்தம் - தேன்.

    (2) கேசபாரம் - கூந்தற் றொகுதியாகிய சுமை. (பி-ம்.) ‘கேசபாசம்’. சைவலக்கொத்து - கொடிப்பாசியின் தொகுதி. கேளிர்கள் - உறவினர்.

    (3) தளை - சங்கிலி. கறை அடி - உரல் போன்ற டி. (பி-ம்.) ‘மற்றத் தவளக்களிற்றோனொடு.’ தவளக்களிறு - ஐராவதம். எட்டு மததந்தி - அட்ட திக்கயங்கள்.