பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்105

வேறு
92.
சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து
   தொடுத்த விரைத்தொடையும்
சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிரு
   துங்கக் கொங்கைளின்

விற்கொடி கோட்டிய குங்கும முங்குடை
   வெள்ளங் கொள்ளைகொள
வெளியே கண்டுநின் வடிவழ கையன்
   விழிக்கு விருந்துசெய

இற்கொடி யோடு கயற்கொடி வீரன்
   எடுத்த கருப்புவிலும்
இந்திர தனுவும் வணங்க வணங்கும்
   இணைப்புரு வக்கொடிசேர்

பொற்கொடி யிமய மடக்கொடி வைகைப்
   புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
   புதுநீ ராடுகவே.    
(9)

93.
கொள்ளைவெ ளருவி படிந்திடு மிமயக்
   கூந்தன் மடப்பிடிபோற்
கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல்
   குடையு மனப்பெடைபோல்

    92. (அடி, 1) சொற்கொடி - கலைமகள். மலர்க்கொடி - திருமகள். தொடை - மாலை. சுந்தரி - இந்திராணி.

    (2) விற்கொடி கோட்டிய - துர்க்கை எழுதிய. வடிவழகு - இயற்கையழகு.

    (3) இற்கொடி - மனைவி; இங்கே இரதி. கயற்கொடி வீரன் - காமன். காமன் மனைவியோடு வில்லெடுத்தல்; 55. இந்திர தனு-வானவில். இரதியின் வில்லும் காமன் வில்லுமாகிய இரண்டு விற்களும் இந்திர தனுக்கள் இரண்டும் புருவங்களுக்கு உவமை; இந்திரதனு இரண்டென்பது, “எழிலியும், தளிதளித்திரு தனுவெடுத்தன” (தக்க. 159) என்பனாலும் அதன் விசேடக் குறிப்பினாலும் உணரப்படும்.

    93. (அடி, 1) கொள்ளை - மிகுதி. இமயக் கூந்தல் மடப்பிடி: 62, 375. மடப்பிடி முதலியன அம்பிகைக்கு உவமை.