| தெள்ளமு தக்கட னடுவிற் றோன்று | | செழுங்கம லக்குயில்போல் | | தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொரு | | செம்பவ ளக்கொடிபோற் |
| கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசை | | கற்றுப் பொற்றருவிற் | | களிநற வுண்ட மடப்பெடை யோடு | | கலந்து முயங்கிவரிப் | | புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள் | | புதுநீ ராடுகவே | | பொருநைத் துறையொடு குமரித் துறையவள் | | |
10. ஊசற் பருவம்
94. | ஒள்ளொளிய பவளக் கொழுங்கான் மிசைப்பொங்கும் | | ஒழுகொளிய வயிரவிட்டத் | | தூற்றுஞ் சேழுந்தண் ணிலாக்கால் விழுந்தனைய | | ஒண்டரள வடம்வீக்கியே |
| அள்ளிட வழிந்துசே யொளிதுளும் புங்கிரண | | அரணரத் நப்பலகைபுக் | | காடுநின் றோற்றம்ப் பருதிமண் டலம்வளர் | | அரும்பெருஞ் சுடரையேய்ப்பத் |
(2) அமுதக்கடல் - பாற்கடல்; அமுதம் - பால். கமலக்குயில் -திருமகள்.
(3) குழல் - கூந்தல். குழலிசை - வேய்ங்குழலிசை. பொற்றரு - கற்பகம்.
(3-4) வரிப்புள் - கீற்றுக்களையுடைய ஆண்வண்டு.
94. அம்பிகை மாணிக்க ஊசலை ஆடுதல் கூறப்படும். (அடி, 1) கால் - தூண். வயிரத்தாலாகிய விட்டம். கால் விழுந்தனைய - ஒழுகினல்போன்ற. தரளவடம் - முத்துவடம் (பி-ம்.) ‘வீக்கிடும்’.
(2) அள்ளிட - அள்ளிக்கொள்ளும்படு. (பி-ம்.) ‘செற்றொளி’. அருணரத்நப் பலகை - மாணிக்கப் பலகை; அருணம் - சிவப்பு. சிவபெருமான் சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருப்பர்.
|