| தெள்ளுசுவை யமுதங் கனிந்தவா னந்தத் | | திரைக்கடன் மடித்துழக்கும் | | செல்வச் செருக்கர்கண் மனக்கமல நெக்கபூஞ் | | சேக்கையிற் பழையபாடற் |
| புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தமவல்லி | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழிகினுக் கொத்தகொடி | | |
95. | விற்பொலிய நிலவுபொழி வெண்ணித் திலம்பூண்டு | | விழுதுபட மழகதிர்விடும் | | வெண்டரள வூசலின் மிசைப்பொலிவ புண்டரிக | | வீட்டிற் பொலிந்துமதுரச் |
| சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின் றவளுநின் | | சொருபமென் பதுமி ளநிலாத் | | தோற்றுமதி மண்டலத் தமுதமய மாயம்மை | | தோன்றுகின் றதும்விரிப்ப |
| எற்பொலிய வொழுகுமுழு மாணிக்க மணிமுகப் | | பேறிமழை முகிறவழ்வதவ் | | வெறிசுடர்க் கடவுடிரு மடியிலவன் மடமகள் | | இருந்துவிளை யாடலேய்க்கும் |
(3) ஆனந்தமாகிய கடல். செல்வம் - சிவஞானமாகிய செல்வம். செருக்கர்கள் - இறுமாப்புடையவர்கள்; “இருங்களியாயின்றி யானிறு மாப்பவின் பம்பணிவோர், மருங்களி யாவன லாடவல்லோன்” ( திருச்சிற் 52) என்பதில் இறுமாப்புக் கூறியது காண்க. மனக் கமலமாகிய சேக்கை; பூ - பொலிவு. பழைய பாடல் - வேதம்.
(4) புள் - வண்டு. கமலமென்றற்கேற்ப்ப் புள்ளொலி கூறப்பட்டது. புழுகுநெய்ச் சொக்கர்: 157.
(3-4) சேக்கையிற் புகுந்த வென்க.
95. அம்பிகை முத்தாலாகிய ஊசலை ஆடுதல் கூறப்படும். (அடி, 1) பொலிவ - விளங்குதல். புண்டரிகம் - வெண்டாமரை. (பி-ம்.) ‘வீட்டுப்’.
(2) சொல்லுகின்றவள் - கலைமகள். கலைமகளை அம்பிகையின் ஒரு கூறென்பர். (பி-ம்.) ‘தூற்றுமதி மண்டலத் தமுதமாயம்மை நீ.’ அம்பிகை சந்திரமண்டலத்தில் இருத்தல்: 73.
(3) எல் - ஒளி. மாணிக்க மணிமுகப்பு - மாணிக்கம் பதித்த அழகிய வாயில்மாடம். சுடர்க்கடவுள் - சூரியன். மடமகள் - யமுனை நதி;
|