| பொற்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
96. | உருகிய பசும்பொன் னசும்பவெயில் வீசுபொன் | | ஊசலை யுதைந்தாடலும் | | ஒண்டளி ரடிச்சுவ டுறப்பெறு மசோகுநற | | வொழுகுமலர் பூத்துதிர்வதுன் |
| திருமு னுருவங்கரந் தெந்தையார் நிற்பது | | தெரிந்திட நமக்கிதுவெனாச் | | செஞ்சிலைக் கள்வனொரு வன்றொடை மடக்காது | | தெரிகணைகள் சொரிவதேய்ப்ப |
| எரிமணி குயின்றபொற் செய்குன்று மழகதிர் | | எறிப்பவெழு செஞ்சோதியூ | | டிளமதி யிமைப்பதுன் றிருமுகச் செவ்விவேட் | | டெழுநாத் தலைத்தவமவன் |
| புரிவது கடுக்குமது ராபுரி மடக்கிள்ளை | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
அது நீல நிறமுடையது. மாணிக்கமாடத்துக்குச் சூரியனும் அதில் தவழும் மேகத்திக்கு யமுனையும் உவமைகள்.
96. அம்பிகை பொன்னூசல் ஆடுதல் கூறப்படும்.
(அடி, 1) அசும்ப - துளிப்ப. மகளிர் உதைத்தலால் அசோகு மலரென்பர்; “ஏடவிழ. மகிழ்சு வைக்க வெழிற்பாலை நண்பு கூடப், பாடலை நிந்திக் கத்தேம்படிமுல்லை நகைக்கப்புன்னை, ஆட நீள் குராவ ணைக்க வசோகுதைத் திடவா சந்தி, பாடமாப் பார்க்க வார்சண் பகநிழல் படத்த ளிர்க்கும்” (சூடா. 12-ஆம். 95) அசோக மரத்தில் தொடுத்த ஊசலாதலின் இங்ஙனம் கூறினார்; “ஒண்டளிர்ச் செயலை, ஓங்குசினைத் தொடுத்த வூசல்” (அகநா. 68:5-6); “செந்தளிர்ப்பிண்டிசை சினை தொறுந் தொடுத்த .......... ஊக்கமை யூசல்” (பெருங். 1.46: 176-9.)
(2) தெரிந்து இடம் நமக்கு இது எனா; இடம் - சமயம்; “இடனறிந் தூடி” (நாலடி. 384.) கள்வன் - மன்மதன்.
(1-2) அசோக மலரும் மன்மதன் அம்புகளில் ஒன்றாதலின் இங்ஙனம் கூறினார்.
(3) எரிமணி - நெருப்பைப்போன்ற மாணிக்கம் (25.) குயின்ற - பதித்த. இமைப்பது - விளங்குவது. எழுநாத்தலை - அக்கினியில். அவன் - சந்திரன்.
|