97. | கங்கைமுடி மகிழ்நர்திரு வுளமசைந் தாடக் | | கலந்தாடு பொன்னூசலக் | | கடவுடிரு நோக்கத்து நெக்குருகி யிடநின் | | கடைக்கணோக் கத்துமற்றச் |
| செங்கண் விடை யவர்மனமு மொக்கக் கரைந்துரு | | செய்கையவர் சித்தமேபொற் | | றிருவூச லாவிருந் தாடுகின் றாயெனும் | | செய்தியை யெடுத்துரைப்ப |
| அங்கணெடு நிலம்விடர் படக்கிழித் தோடுவேர் | | அடியிற் பழுத்தபலவின் | | அளிபொற் சுளைக்குடக் கனியுடைந் தூற்றுதேன் | | அருவிபில மேழுமுட்டிப் |
| பொங்கிவரு பொழின்மதுர மதுரைநா யகிதிருப் | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
98. | சேர்க்குஞ் சுவைப்பாட லமுதொழுக வொழுகுபொற் | | றிருவூசல் பாடியாடச் | | சிவபிரான் றிருமுடி யசைப்பமுடி மேற்பொங்கு | | செங்கணர வரசகிலம்வைத் |
| தார்க்கும் பணாடவி யசைப்பச் சராசரமும் | | அசைகின்ற தம்மனையசைந் | | தாடலா லண்டமு மகண்டபகி ரண்டமும் | | அசைந்தாடு கின்றதேய்ப்பக் |
97. அம்பிகையாடும் ஊசலுக்கும் சிவபெருமான் திருவுள்ளத்திற்கும் ஒப்புமை கூறப்படும்.
(அடி, 1) நோக்கத்து - பார்வையினால்; அவர் கண்களுள் ஒன்று அக்கினியாதலின் அதனாற் பொன்னூசல் உருகிற்றென்றார்.
(3) விடர் - பிளப்பு. வேரடியிற் பழுத்த பலவு: 52, 56. அளி - மிகக்கனிந்த. பொற்சுளை - பொன்போன்ற சுளை. பிலம் ஏழும் - கீழுலகங்கள் ஏழினையும்.
(4) (பி-ம்.) ‘மதுரை மதுரநாயகி’.
98. (அடி, 1) பாடலைப்பாடி ஊசலை ஆட என்க. மகிழ்ச்சியால் சிவபிரான் தலையசைத்தனர் (79.) அரவரசு - ஆதிசேடன். அகிலம் - உலகம்.
(2) பணாடவி - படங்களின் தொகுதி (6.) அம்மனை - தாயாகிய நீ. அகண்ட பகிரண்டமும் - வெளியிலுள்ள அண்டங்கள் முழுவதும்.
|