67. | பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் | | தேரின்ப நல்குந் திருநாடும் - பாரின்பம் | 68. | எல்லாங் கடந்த விருநிலத்துட் போக்குவர | | வல்லா துயர்ந்த வணிநகரும் - தொல்லுலகில் | 69. | ஈறு முதலுமகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக் | | கூறி நடாத்துங் குரகதமும் - ஏறுமதம் | 70. | தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம் | | காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ | 71. | பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா | | நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் | 72. | ஐந்தொழிலு மோவா தளித்துயர்த்த வான்கொடியும் | | வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் | 73. | நீக்கமின்றி யாட நிழலசைப்பான் போற்புவனம் | | ஆக்கி யசைத்தருளு மாணையும் - தேக்கமழ்ந்து |
67. இன்பவெள்ளப் பெருக்காறு: ‘ஆனந்தங் காணுடையானாறு’ என்பது திருவாசகம். மீதானம் - மேலான இடம்.
68. போக்கு வரவல்லாதுயர்ந்த அணிநகரென்றது பரானந்த முத்தியை; “போக்கு வரவும் ...........கடந்துலவா வின்பம்” என்றார் முன்னும்; 29.
69. குரகதம் - குதிரை, மதம் - சமயம்; யானைக்குரிய மதமென்பது மற்றொரு பொருள்.
70. துதிக்கையினால் - தோத்திரம் செய்வதனால்; தும்பிக்கை யினாலென்பது மற்றொரு பொருள். பஞ்சமலம் - ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. கடாக்களிறு - மதயானை, சிவஞானக்கடாக்களிறு: “ஞான வாரணம்” (566.); “சிவசமயத்திரு ஞான வேழமே” (திருவகுப்பு.)
71. போதம் - அறிவு, நார் - அன்பு; மாலைகட்டுதற்குரிய நாரென்பது மற்றொரு பொருள்: “பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே” (மீனாட்சியம்மை யிரட்டைமணிமாலை); “தொழுதகன்ற வன்பெருநார் தொடுத்தலங்கல் சூட்ட” (திருவிளை.)
72. வான் கொடி - பெருமையையுடையகொடி, நவநாதம் - புதுமைதரும் நாத தத்துவம், நாதமுரசு: “பருமித்த நாதப் பறை” (திருவா.)
73.ஆடி - கண்ணாடி, தான் ஆடி, கண்ணாடியில் நிழலை அசையச் செய்பவன்போல். புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணை: “தன்வலி
|