பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்111

போர்க்கோல மேதிரு மணக்கோல மானபெண்
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(6)

100.
குழியும் பசுங்கண் முசுக்கலை வெரீஇச்சிறு
   குறும்பலவி னெடியபாரக்
கொம்பொடி படத்தூங்கு முட்புறக் கனியின்
   குடங்கொண்டு நீந்தமடைவாய்

வழியுங் கொழுந்தே னுவட்டெழு தடங்காவின்
   வள்ளூகிர்க் கருவிரற்கூன்
மந்திக ளிரிந்தேகும் விசையினில் விசைத்தெழு
   மரக்கோடு பாயவயிறு

கிழியுங் கலைத்திங்க ளமுதருவி தூங்குவ
   கிளைத்தவண் டுழுபைந்துழாய்க்
கேசவன் கால்வீச வண்டகோ ளகைமுகடு
   கீண்டுவெள் ளருவிபொங்கிப்

பொழியுந் திறத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(7)

ஏற்றலும் - எதிர்த்தவுடன். மலர்க்கட்கணை துரக்கும் கரும்புருவ வில் - மலர் போன்ற கண்ணாகிய கணையைச் செலுத்தும் கரிய புருவமாகிய வில்; மலராகிய தேனையுடைய அம்பைச் செலுத்தும் கரும்பின் உருவமாகிய வில். புருவ வில்லையும் கைவில்லையும் வளைத்து. (பி-ம்.) ‘ஏற்றலமரக்’; ‘கருப்புருவ வில்’.

    100. குரங்குகளின் செயல்கள் கூறப்படும்.

    (அடி, 1) பொழிலில் உண்டாகும் தேன்வெள்ளத்தில் பலாப்பழத்தைக் குடமாகக் கொண்டு முசுக்கலை நீந்தியது; வெரீஇ - அஞ்சி. முட்புறக் கனி - பலாப்பழம். கனியாகிய குடம்; இன்: வேண்டா வழிச்சாரியை. (பி-ம்.) மடல்வாய்.’

    (2) உவட்டெழு - பெருக்கெடுக்கின்ற. வள் உகிர் - கூரிய நகம். மந்தி - பெண் குரங்கு. இரிந்து ஏகும் - கெட்டு ஓடுகின்ற (பி-ம்.) ‘இருந்தேகும்.’

    (3) தூங்குவ - ஒழுகுதல். அண்டகோளகைமுகடு - வானத்தின் உச்சி. கீண்டு - பிளந்து; “கீள்வது செய்த கிழவோன்” (திருச்சிற். 247.) வெள்ளருவி - இங்கே, கங்கை.