பக்கம் எண் :

112குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

101.
ஒல்குங் கொடிச்சிறு மருங்கிற்கிரங்கிமெல்
   லோதிவண் தார்த்தெழப்பொன்
ஊசலை யுதைந்தாடு மளவின்மலர் மகளம்மை
   உள்ளடைிடக் கூன்பிறைதழீஇ

மல்குஞ் சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
   வாணியென் றசதியாடி
மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்கொரு
   வணக்கநெடு நாண்வழங்கப்

பில்குங் குறும்பனிக் கூதிர்க் குடைந்தெனப்
   பிரசநா றைம்பாற்கிளம்
பேதையர்க ளூட்டுங் கொழும்புகை மடுத்துமென்
   பெடையொடு வரிச்சுரும்பர்

புல்குந் தடம்பணை யுடுத்தமது ரைத்தலைவி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(8)

102.
கொன்செய்த செழுமணித் திருவூச லரமகளிர்
   கொண்டாட வாடுந் தொறும்
குறுமுறுவ னெடுநீல வருத்துஞ் சகொரமாய்க்
   கூந்தலங் கற்றைசுற்றும்

    101. (அடி, 1) ஒல்கும் - தளர்கின்ற. (பி-ம்.) ‘சிறு மருங்குற்கு.’ ஓதி - கூந்தல். எழ - எழும்படி.

    (1-2) உள்ளடிக் கூன்பிறை தழீஇ மல்கும் சுவடு - உள்ளங்காலில் உள்ள வளைந்த பிறையிம் சுவடு; இது சிவபெருமான் அம்பிகையின் ஊடலை நீக்கும் பொருட்டுப் பணிந்த காலத்து அமைந்தத்து. வலம் பிரிக்கீற்று - சங்க ரேகை. வாணி: விளி. அசதியாடல் - பரிகாசம் செய்தல் (சீவக: 1871.) முறுவல் கோட்ட - நகைப்ப. (பி-ம்.) ‘முறுவல் கோடல்’. திருமகள் அசதியாடி நகைத்தலினால் அம்பிகை நாணமடைந்து தலைவணங்கினாள். வணக்கத்தை நெடிய நாணம் உண்டாக்க.

    (3) கூதிர்க்கு உடைந்தென - கூதிர்ப்பருவத்திற்கு மெலிசவற்றதாக. பிரசம் - தேன். ஐம்பாற்கு - கூந்தலுக்கு. கூதிர்க்குளிரால் வருந்திய வண்டு புகையின்கண் சென்று குளிர் காய்ந்தது.

    (4) தடம் பணை - பெரிய வயல்கள்.

    102. (அடி, 1) கொன் - பெருமை. அரமகளிர் - தெய்வப் பெண்கள். முறுவலாகிய நிலவை. சகோரம் - நிலவை உண்ணும் பறவை.