பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்117

4.
மனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே
கனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே

5.
விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பெருநைத்     
தண்ணாறு குடைந்துவையைத் தண்டுறையும் படிந்தனையே     

6.
பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்    
வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே.    

அராகம்
1.
அவனவ ளதுவெனு மவைகளி லொருபொருள்
இவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை.

2.
இலதென வுளதென விலதுள தெனுமவை
அலதென விவிட வரியதொ னளவினை.

3.
குறியில னலதொரு குணமில னெனநினை
அறிபவ ரறிவினு மறிவரு நெறியினை.

4.
இருமையு முதவுவ னெவனவ னெனநின
தருமையை யுணர்வுறி னமிழ்தினு மினிமையை.

தாழிசை
1.
வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை        
செய்கைக்கென் ற்றியேமாற் றிருமுடிமண் சுமந்ததே.        

    4. மனத்தின்கண் வட்டமிடும் சுருதி; சுருதி - வேதம்; அது மனனம் செய்யப்படுதலின் இங்ஙனம் கூறினார். வய - வலி. மாறு அன்றே - விரோதமல்லவா? கனவட்டம் - பாண்டியர்களின் குதிரையின் பெயர். களிப்பது மாறன்றே.

    5. விண்ணாறு - கங்கை. அது சிறு துளியளவாய் ஒரு சடையில் அடங்கினமையின் இறைவர் நனைந்தில். (பி-ம்.) ‘வைகை’. ஒரு பெரிய ஆற்றைத் தலையிலே கொண்டும் நனையாத தன்மையையுடைய நீ வையையும் பொருநையும் ஆகிய சிற்றாறுகளில் நீராடுதல் பொருந்துமோ வென்றபடி.

    6. தமிழின் மழலை - தமிழாகிய மழலைச் சொல்லை. கன்னித் தமிழாதலின் தமிழின் மழலையென்றார்.

    (அராகம்) 3. (பி-ம்.) ‘அறிபவரறியினும்’. 4. ‘உதவுவதெவன்’.

    (தாழிசை.) 1, (பி-ம்.) ‘வையைக்கோ’. கங்கை வானதிக்கோ - கங்கை நதிக்குக் கரை கட்டவோ. (பி-ம்.) ‘அறியோமாற்’. திருமுடியினமேல் மண்சுமந்த காலத்து அவர் தலையிலுள்ள கங்கையின் மேலும் மண்பட்டதாகலிம் இங்ஙனம் கூறினார்.