பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்119

சுரிதகம்
பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக்
கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடி
அண்ணலா னே்று மண்ணுண்டு கிடப்பக்
கண்போற் பிறழுங் கெண்டவல னுயர்த்து
5.
வரியுடற் கட்செவி பெருமூச்ச செறியப்
பொன்புனைந் தியன்ற பைம்பூண் டாங்கி
முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசிற்
பசும்பொனசும் பிருந்த பைம்பென்முடி கவித்தாங்
கிருநிலங் குளிர்தூங் கொருகுடை நிழற்கீழ்
10.
அரசுவீற் றிருந்த வாதியங் கடவுணின்
பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும்
ஐம்புல வழக்கி னருச்சுவை யறியாச்
செம்பொருட் செல்வநின் சீரடித் தொழும்புக்
கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக
15.
பிறிதொரு கடவடுட்குப் பெரும்பயன் றரூஉம்
இறைமையுண் டாயினு மாக குறுகிநின்
சிற்றடி யர்க்கே குற்றேவ றலைக்கொண்

    (சுரிதகம்.) (1) பொன்னிறத்தைப் பெற்று. பீர் பூப்ப - பிரிவினால் நிற வேறுபாடு அடைய; பீர் - பசலை. இயலபாக நிகழ் வதைச் சிவபெருமான் அணியாமையால் உண்டானதாகக் கூறினர். (2) கருஞ்சினை வேம்பு - கரிய கொம்புகளையுடைய வேம்பினது மலரை. (பி-ம்.) ‘பொன்முடிச்சூடி’. (3) ஆனேறு திருமாலாதலின் மண்ணுண்டு கிடப்ப என்றார்; தன்னால் ஒரு பயனினமை கண்டு வீழ்ந்து கிடப்ப வென்பது வேறொரு பொருள். (4) கண்போல் - மகளிர் கண்ணைப்போல. (5) கட்செவி - முன்பு ஆபரணமாக அணிந்த பாம்பு. பெருமூச்செறிய - நம்மை விடுத்தனரே என்ற ஏக்கத்தால் பெருமூச்சுவிட பாம்பு இயல்பாகவே பெருமூச்செறிதலுக்கு வேறொரு காரணம் கற்பித்தார், (11) சின்மலர -இரண்டு மலர்போன்ற திருவடிகளை. பழிச்சுதும் - புகழ்வேம். (12) ஐம்புலன்களின்கட் செல்லுதலால் உண்டாகும் சுவையை யறியாத: “பொறிவாயிலைந்தவித்தான்” (குறள்.) (13) செம்பொருளென்றது முத்தியை. (13-4,) நின் அடித்தொ.உம்பின் பயனாகச் சிறந்த பொருளொன்றும் கிடையாமற் போயினும், (15-6.) நின்னையன்றி வேறொரு கடவுளுக்கே பெரும்பயனை