பக்கம் எண் :

120குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

டம்மா கிடைத்தவாவென்று
செம்மாப் புறூஉந் திறம்பெறற் பொருட்டே.    
(2)

நேரிசை வெண்பா
106.
பொருணான் கொருங்கீன்ற பொன்மாடக் கூடல்
இருணான் றிருண்டகண்டத் தெம்மான்-சரணன்றே
மண்டுழா யுண்டாற்குக் கண்மலரோ டொண்மவுளித்
தண்டுழாய் பூத்த தடம்.    
(3)

கட்டளைக் கலித்துறை
107.
தடமுண் டகங்கண் டகந்தாள தென்றுநின் றண்மலர்த்தாள்  
நடமுண் டகமகங் கொண்டுய்ந்த வாவினி நங்களுக்கோர்  
திடமுண் டகந்தைக் கிடமுண் டிலையெனத் தேறவிண்ணோர்  
விடமுண்ட கந்தரச் சுந்தர சுந்தர மீனவனே.              
(4)

னயளிக்கும் தலைமை இருப்பினும் இருக்க; இறைமை - தலைமை. (18) அம்மா கிடைத்தவா - நமக்கு இப்பேறு கிடைத்தவாறு என்ன ஆச்சரியம்? (19) செம்மாப்பு -இறுமாப்பு. “இறுமாந்திருப்பன் கொலோ” (தே. அங்கமாலை.)

    (முடிபு.) பொலிந்தோய் கேள்; திறம் பெறற் பொருட்டு, என நின் சின்மலர் பழிச்சுதும்.

    106. பொருள் நான்கு - அறமுதலிய உறுதிப் பொருள்கள் நான்கு. சரண் - திருவடி. அன்று, ஏ: அசைநிலைகள். மணி துழாய் உண்டான் - திருமால்: துழாய் - துழாவி. தண் துழாய் குளிர்ந்த துவளம். தடம் - குளம், இடம்; சிலேடை. திருமால் தன் கண்மலரால் திருவடிகளை அருச்சித்ததனாலும் திருமுடி பட வணங்கும்போது அதன்கண் உள்ள திருத்துழாய் வீழ்வதனாலும் அவ்விரண்டற்கும் உரிய தடமென்றார்.

    107. தடம் முண்டகம் - தடாகத்திலுள்ள தாமரைமலர். கண்டகத்தாதளது - முள்ளையுடைய தண்டையுடையது. என்று - என்று வெறுத்து. தாளாகிய நடஞ்செய்யும் முண்டகத்தை. அகம் - மனம். உய்ந்தவா - உய்ந்தது என்ன வியப்பு! திடம் உண்டு - வன்மை உளதாயிற்று. உண்டிலை - இல்லை. என விண்ணோர் தேற. விடமுண்ட பின்னர்த் தேறினர். கந்தரச் சுந்தர - கழுத்தால் அழக் பெற்றவரே; “கறை நிறுத்திய சுந்தரக் கடவுள்” (திருவிளை. நாடு. 1.) சுந்தர மீனவன் - சுந்தரபாண்டியர்.