பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்125


சந்தம்
115.
வரியளி பொதுளிய விதழியொ டமரர்  
    மடந்தையர் நீல வனம்புக் கிருந்தன  
  மதியக டுடைபட நெடுமுக ட்டைய  
    நிமிர்ந்தபொன் மேரு வணங்க்ப் பொலிந்தன  
  மழகதிர் வெணில்விட வொளிவிடு சுடர்வ  
    லயங்கொடு லோக மடங்கச் சுமந்தன  
  மதுகையொ ட்டுதிறன் முறைமுறை துதிசெய்  
    தணங்கவ ராடு துணங்கைக் கிணங்கின  

பொருசம ரிடையெதிர் பிளிறுமொர் களிறு    
    பிளந்தொரு போர்வை புறஞ்சுற் றிநின்றன    
  புகையெழ வழலுமிழ் சுழல்விழி யுழுவை    
    வழங்குமொ ராடை மருங்குற் கணிந்தன    

குறிப்பை யுடையது. இதழி - கொன்றை மலர்மாலை. இந்தா - இதோ பெற்றுக்கொள்; “இந்தாவிஃதோ ரிளங்குழவி யென்றெடுத்துச், சிந்தா குலந்தீரத் தேவி கையி நீந்தனனே’ (கந்த. ஏள்ளியம்மை. 35); இச்சொல் ஈதா என்பதன் மரூஉ (பரி.8:60, பரிமேல்.) நிலம் மேவு - விரபதாபத்தால் உயிர் நீங்காமல் நெடுங்காலம் இவ்வுலகத்தில் விரும்பியிரு. எனச் சொலார் - என்று சொக்கநாதர் கூறார். ‘இந்தா நிலமேயெனச் சொலீர்’ என்ற பாடத்திற்குத் தோழிகள் கூறுவதைக் கொண்டு கூறியதாகக் கொள்க; இதற்கு, நில் அம்மேயென்று பிரித்துப் பொருள் கொள்க. மந்தாநிலம் - தென்றற் காற்று.

    115. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தனதன தனன தனந் தனதான தனந்தத் தனந்தன.

    (அடி, 1) வரியளி - வரிகளையுடைய வண்டுகள். இதழி - கொன்றை. நீலவனம் - மகளிர் கண்களாகிய கருங்குவளை மலர்களின் தொகுதி. மதியின் வயிறு கிழியும்படி நீண்ட வானத்தின் உச்சியளவும் உயர்ந்த மேருமலை. அடைய - முழுதும். மேரு வணங்கப் பொலிதலாவது அம்மலையை வளைத்து விளங்குதல். மழகதிர் - இளைய கிரணம். சுடர் வலயம் - சுடர் வீசும் தோள்வளை. இறைவன் உலகைக் பாதுகாக்கும் செயலை லோக மடங்கச் சும்பபதாக்க் குறித்தனர். மதுகை - வலி. திறலைத் துதிசெய்து. அணங்கவர் - பேய் மகளிர். துணங்கை - ஒருவகைக் கூத்து; இங்கே, போர்க்களத்தே பேய்கள் வெற்றிபெற்ற வீரனை வாழ்த்தியாடுங் கூத்து (முருகு. 51 - 6.)

    (2) களிறு - தாருகாவன முனிவர் விட்ட யானை. போர்வை - யானைத் தோலாகிய போர்வையை. உழுவை - தாருகாவன முனிவர் விட்ட புலி.