| புலவெயி றயிறரு குருதியொ டுலவு | | மடங்களின் வீர மொடுங்கத் துரந்தன | | புகலியர் குரிசில்ப ணொடுதமி ழருமை | | அறிந்தொரு தாளம் வழங்கப் புகுந்தன |
| உருமிடி யெனவெடி படவெதிர் கறுவி | | நடந்தொரு பாண னொதுங்கத் திரிந்தன | | உருகிய மனமொடு தழுவியொர் கிழவி | | கருந்துணி மேலி டுவெண்பிட் டுகந்தன | | உறுதியொ டவண்மனை புகும்வகை கடிது | | சுமந்தொரு கூடை மணுந்திச் சொரிந்தன | | உருவிய சுரிகையொ டெதிர்வரு செழியர் | | பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன |
| தருசுவை யமுதெழ மதுரம தொழுகு | | பசுந்தமிழ் மாலை நிரம்பப் புனைந்தன | | தளிரியன் மலைமகள் வரிவளை முழுகு | | தழும்பழ காக வழுந்தக் குழைந்தன | | தளர்நடை யிடுமிள மதலையின் மழலை | | த்தும்பிய வூற லசும்பக் கசிந்தன | | தமிழ்மது ரையிலொரு குமரியை மருவு | | சவுந்தர மாறர் தடம்பொற் புயங்களே. |
புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கல் - புலால் நாற்றம் வீசும் பற்களில்தான் உண்ட இரத்தத்தோடு உலாவுகின்ற நரசிங்கம். வீரமொடுங்கத் துரந்தன வென்றது சரபாவதாரமெடுத்து நரசிங்கத்தின் வலியழித்ததைக் குறித்தவாறு. (பி-ம்.) ‘ஒடுங்க்த் தொடர்தன’. புகலியர் குரிசில் - திருஞான சம்பந்தர். அவருக்குத் தாளம் வழங்கியது திருக்கோலக்காவென்னும் தலத்தில். (3) வெடி - ஓசை. கறுவி - கோபித்து. நடந்த ஒரு பாணன் - நடந்து வந்து பாணனாகிய ஏமநாதனென்பவன். ஒதுங்க - ஓட. இது பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று சாதாரிபாடி ஏமநாதனென்னும் பாணன் தானே ஓடும்படிசெய்த திருவிளையாடலைக் குறித்தது. ஓர் கிழவி - செம்மனச் செல்வி. மனை - அடைப்பதறைகாக வரையறுத்த இடம். உந்தி - நுனிக்காலை ஊன்றி நின்று. (பி-ம்.) ‘மண் முந்திர்ச்’. சுரிகை - உடைவாள். (4) மதுரம் - இனிமை. வளைமுழுகு தழும்பு - வளைத்தழும்பு; இவ்வரலாறு காஞ்சிப் புராணத்துள்ள தழுவக் குழைந்த படலத்தால் விளங்கும். இளமதலை - முருகக் கடவுள். ஊறல் - வாய்நீர் (205, 312, 401, 600.) (பி-ம்.) ‘கனிந்தன’. குமரி - தடாதகைப் பிராட்டியார்.
|