பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்131

மெய்யாத மெய்கடிந்து வீடாத வீடெய்தி  
   வீழார் வீழச்  
செய்யாள்செய் சரக்கறையாந் திருவால வாயிலுறை  
   செல்வனாரே.    
(19)

எழுசீர்ச் சந்த விருத்தம்
123.
ஆறுதலை வைத்தமுடி நீணிலவே றிப்பவெமை
   ஆளுடைய பச்சை மயிலோ
டீறுமுத லற்றமது ராபுரியி லுற்றபர
   மேசரொரு சற்று முணரார்
நீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரின்
   நீள்சிலைகு னித்து வழிதேன்
ஊறுகணை தொட்டுவெளி யேசமர்விளைப்பதுமென்
   ஊழ்வினைப லித்த துவுமே.    
(20)


கட்டளைக் கலித்துறை
124.
பல்லா ருயிர்க்குயி ராமது ரேசரப் பாண்டயன்முன் 
கல்லானைக் கிட்டகரும்பன்று காணின் களபக்கொங்கை 

விரும்பாதவர்கள் விரும்ப வென்பது வேறு பொருள். செய்யாள் செய் - திருமகளாற் செய்யப்பட்ட; செய்யாள் - செய்யாதவளென்பது வேறுபொருள். சரக்கறை - பொன்ன்றை; “சரக்கறை யோவென் றனி நெஞ்சமே”(தே.) தேவரீர் தலைவியைப் பாதுகாத்தருள வேண்டுமென்பது கருத்து. இச்செய்யுள் முரண்விளைந்தழிவணி.

    123. (சந்தக் குழிப்பு.) தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்த தனனா.

    தலைவி இரங்கிக் கூறல். ஆறு - கங்கை நதியை. முடி - சடைமுடி பச்சைமயில் - மரகதவல்லியாகிய அங்கயற்கணம்மை (198.) ஒரு சற்றும் - சிறிதும். துட்டமதன்: 185. அலரின் நீள் சிலை - பூவாகிய நீண்ட வில்லை; இன:்வேண்டாவழிச் சாரியை. மன்மதனுக்குப் பூவும் வில்லென்பர்; “பூங்குலைசிலையாக் கொண்டவர்” (177); இது காமநூலென்றும், காம காண்டமென்றும் கூறப்படும் (சிலப். 2 : 42 -5, குறிப்புரை.); காமனை, “புஷ்ப தந்வா’ என்பர் வடமொழியாளர்,

    மதன் சமர்விளைப்பதையும் பரமேசர் சற்றும் உணரார்.

    124. பாங்கி தலைவன் தந்த தழையை ஏற்றுக் கொள்ளும்படி தலைவியிடம் சொல்லுதல்.