| வல்லானைக் கேயிடவாய்த்தது போலுமென்வாட்கணன்னாய் | | வில்லார்ர புயத்தண்ண றணளி யாற்றந்தமென்றழையே. |
வஞ்சித்துறை 125. | தழைத்திடுங் கூடலார் | | குழைத்துடன் கூடலார் | | பிழைத்திடுங் கூடலே | | |
வஞ்சி விருத்தம் 126. | கூட லம்பதி கோயில்கொண் | | டாடல் கொண்டவ ராடலே | | ஊட லூம்முடம் பொன்றிலே | | |
அன்னாயென்றது தலைவியை (தொல். பொருளியல், 52, ந.) (பி-ம்) ‘வாட்கணினாய்’. வில் ஆர் - வில் பொருந்திய; வில் - விற்றழும்பெனினும் ஆம் (சீவக. 21, ந.) அண்ணல் - தலைவன். தழை - மலர்களையும் இலைகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்ட உடை: முருகு. 201-ஆம் அடி முதலியவற்றைப் பார்க்க. தண்ணளியாற் றந்த என்றதனால், அக்கரும்பினும் இத்தழை சிறந்ததென்பதைப் புலப்படுத்தினாள்.
125. தலைவி கூற்று. கூடலிழைத்தலென்னும் துறை.
கூடலார் - கூடற்பதியையுடையவர்; கூடல் - மதுரை. குழைத்து உடன் கூடலார் - மனத்தை உருக்கி என்னோடு சேரார். இழைத்திடும் கூடல் - மணலில் இழைத்திடும் கூடற்சுழி; எழுவாய். கூடற்பிழைத்திடும் - கூடுதல் பிழைத்திடும்; கூடல் - ஒரு தலைப்பு மற்றொரு தலைப்புடன் கூடுதல்.
தலைவரைப் பிரிந்த மகளிர் அவர் வரவை எதிர்நோக்கிப் பார்க்கும் நிமித்தங்களுள்கூடற்சுழி ஒன்று. மணலிற்சுழியைச் சுழித்துப் பார்க்கையில் அது முதலும் கடையும் கூடுமாயின் வருவரென்றும் கூடாதாயின் வாராரென்றும் கொள்ளுதல் மரபு; நீடு நெஞ்சு ணினைந்துக ணீர்மல்கும், ஒடு மாலினொடு டொண்டொடி மாதராள், மாட நீண்மரு கற்பெருமன் வரிற், கூடு நீயென்றுத கூட லிழைக்குமே” (தே. திருநா.)
126. பதி - ஊரை. ஆடல் கொண்டவர் - ஆளுதல் கொண்டவர். ஆடலே - அவர் திருவிளையாட்டு என்ன வியப்பைத் தருகின்றது! ஒரு கொம்பு ஊடலும் கூடலும் ஒன்றிலேதான்; கொம்பு - உமாதேவியார். வேறு வேறான உடம்புகளாற் செய்யப்படும் ஊடலும் கூடலும் ஓருடம்பிலே நிகழ்கின்றன; இஃது என்ன வியப்பென்பது கருத்து.
|