பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்133


கலித்தாழிசை
127.
கொம்மைக் குவடசையக் கூர்விழிவேல் போராடக்
கம்மக் கலனுஞ் சிலம்புங் கலந்தார்ப்ப
மும்மைத் தமிழ்மதுரை முக்கணப்பன் சீர்பாடி
அம்மென் மருங்கொசிய வாடுகபொன் னூசல்
  அழகெறிக்கும் பூண்முலையீ ராடுகபொன் னூசல்.        
(24)

*எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
128.
அழகுற்றதொர் மதுரேசனை யமரேச னெனக்கொண்
    டாடுங்களி யானின்றிசை பாடுங்களி யேம்யாம்
பொழுதைக்கிரு கலமூறுபைந் தேறற்பனை யினைநாம்
    போற்றிக்கரு மூர்த்திக்கிணை சாற்றத்தகு மப்பா
பழுதற்றதொர் சான்றாண்மை பயின்றார்தின முயன்றாற்
    பலமுண்டத னலமுண்டவ ரறிவார்பல கலைநூல்
எழுதப்படு மேடுண்டது வீடுந்தர வற்றால்
    எழுதாத்தொர் திருமந்திர மிளம்பாளையு ளுண்டே.    
(25)

    127. கொம்மைக் குவடு - தனமாகிய மலைகள்; கொம்மை - நகில். கம்மக்கலன் - கம்மியரது தொழிற்சிறப்பைப் பெற்ற ஆபரணங்கள்; ‘கம்ம்பபல்கலம்’ (சீவக. 991.) அம் மென்மருங்கு - அழகிய மெல்லிய இடை.

    128. கட்குடியர் கள்ளையும் அஃது உண்டாகும் பனைமுதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது இது. (பி-ம்.) *தாழிசை.

    மதுரேசன் - மதுரையென்னும் நகர்க்கத் தலைவம்; மதுரை - கள்ளென்பது வேறு பொருள். மதுரேசனானமையால்தான் அமரேசனானா னென்பது களியின் கருத்து; அமரேசன் - மரணமில்லாத தேவர்களுக்குத் தலைவன். களியால் - களிப்பினால். இருகலம் - அறுத்த பாளையிற் செருகி வைத்திருக்கும் இரண்டு மண் கலயங்கள்; இரண்டுகலமென்னும் அளவை யென்பது வேறு பொருள். தேறல் - கள். சாற்றத்தகும் - சாற்றவேண்டும். சான்றாண்மை: சிலேடை. (பி-ம்.) ‘பயின்றாரிதின் முயன்றால்’. பலம் - பிரயோசனம், பழம். நலத்தை உண்டவர் அறிவார். கலைநூல் - கலைகள். ஏடு - பனையேடு. வீடு - முத்தி, குடியிருக்கும் வீடு. வற்று - வன்மையுடையது. பனையோலையால் வீட்டை வேய்தல் பற்றி, ‘வீடும் பறவற்றுய என்றான். எழுதாத்தோர் திருமந்திரம். - கள், உபதேசித்தற்கு உரிய வேதமந்திரம்.