*கொச்சகக் கலிப்பா 133. | ஆவமே நாணே யடுகணையே யம்மதவேள் | | சாவமே தூக்கிற் சமனுஞ் சமனன்றே | | ஓவமே யன்னா ளுயிர்விற்றுப் பெண்பழிகொள் | | பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே. |
சந்த விருத்தம் 134. | கரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து | | கயல்வர வுறங்கு புள்ளீரே | | பருவமு மிழந்தென் மகடுய ருழந்து | | படுவிர கமொன்று முள்ளீரே | | அருமையொ டுமெங்கள் பெருமையை யறிந்து | | வருள்புரி யவிங்கு வல்லீரே | | மருவிய கடம்ப வனமது புகுந்தெ | | மதுரைய ரன்முன்பு சொல்லீரே. |
தழுவினமையால் தோளும் மார்பும் முறையே வளைத்தழும்பும் நகிற்றழும்பும் பெற்றன; இது காஞ்சித்தலத்து நிகழ்ந்த செய்தி. காமநோயால் வரும் துன்பத்தைத் தாம் அறிந்திருந்தும் அவளுக்கு அத்துன்பத்தை மிகுவிக்கன்றாரென்றாள். கண்டுமென்னும் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அம்பாவை செய்வார் - அழகிய பாவையைப் போலச் செயலற்றிருப்பவளாகச் செய்வார். நலிகிற்பின் - நலிந்தால். (பி-ம்.) ‘நலியிற்பின்’. ஏது ஆம் - என்ன பயன் உண்டாகும்.
133. (பி-ம்.) *இன்னிசை. இது தோழி கூற்று. ஆவம் - அம்பறாத்தூணி. மதவேளுடைய ஆவம் முதலியவற்றை ஆராய்ந்தால்; ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. சமனுஞ் சமன் அன்று - யமனும் ஒப்பு அல்லன். இவை உயிரை உடலினின்றும் பிரிக்குந் திறத்தில் அவனினும் ஆற்றலுடையன வென்றவாறு. ஓவம் - சித்திரம். முன் ஒரு பெண் கொலையால் வரும்பழியை அஞ்சும் சொக்கருக்கு இப்போது பெண்பழி பாவமாகுமென்றாள்; இச் செய்தி பழியஞ்சிய படலத்தால் அறியப்படும். (பி-ம்.) ‘பழியஞ்சிச்’.
134. (சந்தக் குழிப்பு.) தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தய்யானா. இது செவிலி கூற்று. இரங்குதல் - ஒலித்தல். புள்ளீரே - பறவைகளே; கயல்வர உறங்கு புள்ளீரென்றமையின் நாரை முதலியவற்றைக் கொள்க. பருவம் - மங்கைப்பருவம். விரகம் - பிரிவாலுண்டாகும் துன்பம்.
|