136. | அடுத்த தோர்தவ வேடமும் புண்டரம் |
| அணிந்த முண்டமு மாய்வெள்ளி யம்பலத் |
| தெடுத்த தாள்பதித் தாடிக் கடைப்பிச்சைக் |
| கிச்சை பேசுமப் பிச்சனெ னச்செல்வீர் |
| கடைக்க ணோக்கம்ம் புன்மூர லும்முயிர் |
| கவர்ந்து கொள்ள விடுத்த கபாலிபோற் |
| பிடித்த சூலமுங் கைவிட்டி லீரென்றோ |
| பிச்சி யாரெனும் பேருமக் கிட்டதே. |
கட்டளைக் கலித்துறை
137. | இடங்கொண்ட மானும் வலங்கொண்ட |
| வெண்மழு வும்மெழுதும் |
| படங்கொண்டு வந்தனை யானெஞ்ச |
| மேயினிப் பங்கயப்பூந் |
135. செவிலி கூற்று; தலைவி கூற்றுமாம்.
வாத பித்த சிலேட்டுமமென்னும் மூன்றால் வரும் பிணியை நினைந்து மும்மைப் பிணியென்றார்.
136. பிச்சியார் - பிச்சை வாங்கச் செல்லும் சிவவேடங் கொண்ட பெண். பிச்சியாருக்கும் சிவபெருமானுக்கும் ஒப்புமை கூறப்படும்.
முண்டம் - நெற்றி. கடை - வீட்டு வாயில்கள். நோக்கம் மன்மதனை எரித்தது; மூரல் புரத்தை எரித்தது. பிச்சியார் இயல்பு: 614.
137. இது தலைவி மடலேறக் கருதி கூறியது, காமமிக்கவர் தன் அன்புக்கு உரியாரைப் பெராவிடத்துத் தம் இருவர் படத்தையும் எழுதிக் கைக்கொண்டு பனைமடலாற் செய்த குதிரையில் ஏறிப் பொதுவிடத்தே வருவதாகச் செய்யுள் செய்தல் மரபு. ஆண்மக்களே மடலேறுவர்; மகளிர் மடலேறுதல் மரபன்று; (தொல். அகத். 35): “கடலன்ன காம