பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்139

பெருநாமங் கொடுத்தவர்தங் கருநாமந் துடைக்கும்
    பெற்றியார் தமிழ்மதுரைக் கொற்றியார் கேளீர்
ஒருநாமம் பயந்தவர்முன் றருநாமம் விந்திங்
    குலகரிடு நாம்மதொன் றுள்ளநீர் வெள்ளைத்
திருநாம மிட்டவன்றே கெட்டவன்றோ விளையோர்
    தெரித்திடுநா மமுமுனிவோர் தரித்திடுநா மமுமே.
(36)

நேரிசை வெண்பா
140.
மும்மைத் தமிழ்க்கூடன் மூலலிங்கத் தங்கயற்கண்
அம்மைக் கமுதா மருமருந்தை - வெம்மைவினைக்
கள்ளத் திருக்கோயிற் காணலாங் கண்டீர்நம்
உள்ளத் திருக்கோயி லுள்.    
(37)

கட்டளைக் கலித்துறை
141.
உள்ளும் புறம்புங் கசிந்தூற் றெழநெக் குடைந்துகுதி  
கொள்ளுஞ்செந் தேறல் குனிக்கின்ற வாபத்திக் கொத்தரும்ப  

விளி. பயந்தவர் - வெற்றோர். அவர் முன் தருநாமமாகிய ஒரு நாமம் - இயற்பெயர். உலகரிடு நாமமென்றது கொற்றியாரென்பதனை இயல்பாக உள்ள பெயரொன்றையும் தொழிலால் வந்த பெயரொன்றையும் உடையீரென்றபடி. (பி-ம்.) ‘உலகரிடு நாமமெமொன்று’. வெள்ளைத் திருநாம மென்றது திருமண்ணை. இட்ட அன்றே - நெற்றிநிலணிந்த அன்றே, இளையோர் தெரிந்திடு நாமம் - இளைஞர்களது ஆராய்ச்சிக்குரிய புகழ். (பி-ம்.) ‘இளையோர்’, ‘இமையோர்’. இளைஞரும் முனிவரும் நும்மைக் கண்டால் மயலுற்றுத் தம் நிலையழிவரென்பது கருத்து.

    140. மூலலிங்கத்து - எத்தலத்திற்கும் முன்பு தோன்றிய இலிங்கத்தில் எழுந்தருளியுள்ள (206); “முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி” (தே. திருநா.) கள்ளத் திருக்கு ஒயில்; திருக்கு - மாறுபாடு. உள்ளமாகிய திருக்கோயிலுள் காணலாம்; “கண்ணி னிற்பர் மனத்திருக்கோயிலே காசியேயவர்க கோர்திருக் கோயிலே” (628); “திருவரங்கந் திருக்கோயில் சேர்ந்துமது திருக்கோயில்”(திருவரங்கக். 41.)

    141. தேறல் - தேன்; இங்கே சிவபிரான்; “மாற்றே னென வந்த காலனை யோல மிடவடர்த்த, கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்” (திருச்சிற். 150): “கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்” (விக்கிரம. உலா.) குனிக்கின்றவா - ஆடுகின்றது என்ன ஆச்சரியம்; குனிக்கின்றி வாறென்பதன் ஈறு தொக்கது. பத்திக் கொத்து - பத்தியின் தொகுதி; எண்வகைப்பத்தி; “விம்மிதம் புளகம் போர்த்தல் விழிப்புன்ன் மொழிதள்ளாடல், செம்மை சேர் சரியை யாதி திருத்தொண்டு துதி தியானம், அம்மவோ திருப்ப ணிக்கென் றீட்டுவ தழித்துண்ணாமை, எம்மையா ளுடை