பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்141

வாடாத செங்கோல் வளர்ப்பீ ரெனக்கன்னி வளநாடெனும்    
நாடாள வைத்தாளு நகையா தினிப்போடு நகையாடவே.    
(40)

*கொச்சகக் கலிப்பா
144.
நகையே யமையுமிந்த நாகரிக நோக்கு
மிகையே யனங்கன் வினைகொளல்வீ ணன்றே
தகையேர் மதுரேசன் றண்டமிழ்நா டன்னீர்
பகையே துமக்கு நமக்கும் பகர்வீரே.    
(41)

கலி விருத்தம்
145.
வீரம் வைத்தவில் வேள்கணை மெய்த்தன    
பாரம் வைத்த பசும்புண் பசும்புணே    
ஈரம் வைத்த விளமதி வெண்ணிலாக்    
காரம் வைத்தென் கடம்பவ னேசனே.    
(42)

    +எழுசீர்ச்சந்த விருத்தம்
146.
கடங்கால் பொருப்பொன் றிடும்போர் வைசுற்றும்
   கடம்பா டவிச்சுந் தர்ரேநும்

அவள் பரிகசியாமல். இனிப்போடு - இனிமையோடு. நகையாட - தேவரீர் நகைத்தலைச் செய்க; ஆட: வியங்கோள்; “நிவந்தோங்கு வெண்குடை மண்ணக நிழற்செய” (மணி. 22 : 14) (பி-ம்.) ‘நகையாடலே.
    முன்பு நகைத்ததனால் இன்னாமை விளைந்தது; இப்போது இனிமை விளையும்படி நகைக்க வேண்டுமென்றவாறு.

    144. (பி-ம்.) *இன்னிசை. இது தலைவியை முன்னிலைப் படுத்தி அவள் தன்னை வித்திய வண்ணத்தைத் தலைவன் உரைத்தல்.

    அமையும் - என்னை வருத்துவதற்குப் போதுமானது. நாகரிகம் - கண்ணோட்டம். அனங்கன் வினைகொளல் - மலரெய்தல் முதலிய செய்கைகளைக் காமன் மேற்கொள்ளுதல். அவன் முயலாமலே நீர் அம் முயற்சியின் பயனை உண்டாக்கினீரென்றபடி. தகை - அழகு. (பி-ம்.) ‘தகைசேர’். பகை ஏது; இல்லையென்றபடி. பகையில்லாதிருப்பவும் இங்ஙனம் நகையாலும் பார்வையாலும் வருத்துதல் முறையன்றென்பது தலைவன் கருத்து.

    145. தோழிகூற்று; தலைவி கூற்றுமாம். தனபாரத்தில் கணை உண்டாக்கிய. மதியின் நிலாவாகிய காரம். வைத்து என் - வைத்ததனாற் பயன் யாது? புண்ணுக்குக் காரம் வைத்தால் ஆறிவிடும்; நீர் காரம் வைத்தும் பசும்புண் பசும் புண்ணாகவே இருக்கின்ற தென்றபடி. (பி-ம்.) ‘காரம் வைத்த’.

    146. (சந்தக் குழிப்பு.) தனந்தா தனத்தந் தனந்தா தனத்தந் தனந்தா தனத்தந் தனதானா. (பி-ம்.)     +எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

    இது சோமசுந்தரக் கடவுள்பால் காமற்ற மகளிர் கூற்று. கடங்கால் பொருப்பு - யானை. (பி-ம்.) ‘போர்வைகட்டும்’. உன்மத்தின் பெருவாழ்வு