பக்கம் எண் :

142குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தடந்தோள் குறித்திங் கணைந்தே மெனிற்பின்   
   தரும்பே றுன்மத்தின் பெருவாழ்வோ   
தொடர்ந்தே யுடற்றிந் திரன்சா பமுற்றும்   
   துரந்தா லுமிப்பெண் பழிபோமோ   
அடைந்தே மிடைக்கொன் றையந்தா ரெவர்க்கென்   
   றமைந்தே கிடக்கின் றதுதானே.    
(43)


அறுசீர்ச்சந்த விருத்தம்
147.
  தான வெங்களி றோடு மிந்திரன் சாப முந்தொலையா
  மேனி தந்தகல் யாண சுந்தரர் மேவு வண்பதியாம்
  வானி மிர்ந்திட வாடு மொண்கொடி வால சந்திரனும்
  கூனி மிர்ந்திட வேநி மிர்ந்திடு கூட லம்பதியே.    
(44)


மருட்பா
148. 
அஞ்சேன் மடநெஞ் சபிடேகச் சொக்கரருட் 
செஞ்சே வடிக்கடிமை செய்யார்போற் - றுஞ்சா 
தெறிதிரைக் கருங்கட லேய்க்கும் 
அறலியற் கூந்தற் காடமர்க் கண்ணே.     
(45)

மயக்கமுறுதலாகிய பெரிய வாழ்க்கை; ஊமத்தமலரைப்போல் ஒன்றுக்கும் பயன்படாத வாழ்வென்பது வேறுபொருள்; யாம் விரும்புவது உயர்ந்த கொன்றை மலராயிருப்பவும் நீர் அளிப்பது இழிந்த ஊமத்தமலரோவென்பதும் வேறொரு குறிப்புப் பொருள். இந்திரன் பழியையே சாபமென்றார் (147.) அடைந்தேமிடை - அடைந்தேமாகிய எங்களுக்குள். (பி-ம்.) ‘அடைந்தேம்விடக்’. இப்பாடத்திற்கு, அடைந்த எம்மைவிட என்று பொருள் கொள்க.

    147. (சந்தக் குழிப்பு.) தான தந்தன தான தந்தன தான தந்தனனா.

    தானம் - மதம். வெங்களிற்றின் சாபத்தோடு இந்திரன் சாபத்தையும். மேனி - முன்னைமேனி. (பி-ம்.) ‘மேன்மைதந்த’. வாலசந்திரன் - பிறை.

    148. தலைவன் கூற்று. நெஞ்சு: அண்மை விளி. அபிடேகச் சொக்கர் - திருமுடியை யணித சொக்கநாதக் கடவுள்; 157. செஞ்சேவடி - மிகச் செம்மை அடி. ஆடு அமர்க்கண் - வெற்றியையும் அமர்த்தலையும் உடைய கண். கண் கடலை யொக்குமென்றது கடலில் அமுதமும் நஞ்சும் தோன்றியது போலக் கண்களிலும் அருட்பார்வையும் மருட்பார்வையும் தோற்றினவென்னும் கருத்தை உட்கொண்டது (562, 668.) அமுதங் கடைந்தது கருங்கடலென்பது ஒரு சாராசிரியர் கொள்கை. (தக்க.284, உரை, விசேடக் குறிப்பு.)