| தூணறா முழவுத் தோண்மடித் தும்பர் | | சுவல்பிடித் தணந்துபார்த் துணங்கும் | | தோரண மாடக் கூடலிற் சோம | | |
நேரிசை யாசிரியப்பா 151. | கரும்பொறிச் சுரும்பர் செவ்வழி பாடச் | | சேயிதழ் விரிக்கும் பொற்பொகுட் டம்புயம் | | மாண்மகற் கலர்பொற் பலகை நீட்டும் | | கடவுள்செங் கைக்குப் படியெடுப் பேய்க்கும் | 5 | தடமலர்ப் பொய்கைத் தண்டமிழ்க் கூடல் | | ஒண்ணுத றழீஇய கண்ணுதற் கடவுள் | | எண்மர் புறந்தரூஉ மொண்பெருந் திகைக்குத் | | தூய்மைசெய் தாங்குப் பானிலா விரிந்த | | இரசதங் குயின்ற திருமா மன்றகம் | 10 | பொன்மலை கிடப்ப வெள்ளிவெற் புகந்தாய்க்குச் | | செம்பொன் மன்றினுஞ் சிறந்தன் றாயினும் | | கருந்தாது குயின்றவென் கன்னெஞ் சகத்தும் | | வருந்தியும் வழங்கல் வேண்டும் | | இருவே றமைந்தநின் னொருபெருங் கூத்தே. |
(4) மகளிர் உள்ள மாடம் தம் உலகத்திற்கும் மேலே சென்றிருத்தலின் தேவர் தலைநிமிர்த்துப் பார்த்தனர், (581: 7-10) உம்பர் - தேவர். சுவல் - பின்கழுத்து.
151. (அடி, 1-4) தாமரை மலருக்குச் சிவபெருமான் திருக்கரம் உவமை. செவ்வழி - ஒரு பண். பாண்மகற்கு - பாண பத்திரனுக்கு. படியெடுப்பு - ஒப்பாகியதொரு பொருளை எடுத்தல்.
(6) கடவுள்: விளி.
(7) எண்மர் புறந்தரூஉம் - திக்குப்பாலகர் எண்மர் பாதுகாக்கும். திகை - திசை. (பி-ம்.) ‘புறந்தரூஉ மொருபேருடுக்கைக்குத்’.
(9-11) இரசதம் - வெள்ளி. வெள்ளியம்பலம் நினக்குப் பொன்னம் பலத்தினும் சிறந்தது. சிறந்தன்று - சிறந்தது.
(10-12) கருந்தாது - இருமறபு. வழங்கல் - செய்தருளல். இருவேறமைத கூத்து - இயல்பாக ஆடிய கூத்தும் மாறி யாடிய கூத்தும். (பி-ம்.) ‘இருபே றமைந்த’.
|