அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 194. | பாமிக்குப் பயின்மதுரைப் பரஞ்சுடரே யொருத்திகயற் | | பார்வை மட்டோ | | காமிக்கு மடந்தையர்கட் கயலெல்லா முமையடைதல் | | கணக்கே யன்றோ | | மாமிக்குக் கடலேழும் வழங்கினீ ரொருவேலை | | மகனுக் கீந்து | | பூமிக்குட் கதலைவறி தாக்கினீர் பலக்கடலும் | | | 195. | நீரோடு குறுவெயர்ப்பு நெருப்போடு நெட்டுயிர்ப்பும் | | நெடுங்கண் ணீரிற் | | பீரோடு வனமுலையுங் குறையோடு நிறையுயிரும் | | பெற்றா ளன்றே | | காரோடு மணிகண்டர் கடம்பவனச் சொக்கர்நறை | | கமழ்பூங் கொன்றுத் | | தாரோடு மனஞ்செல்லத் தளையோடுந் தான்செல்லாத் | | |
194. கண்டோர் கூற்று. ஒருத்தி - அங்கயற்கண்ணம்மை. காமிக்கும் - விரும்பும். கணக்கு - நியாயம் (417.) மாமி - காஞ்சனமாலை கடல் நீராடும் பொருட்டு மதுரையிலுள்ள ஒரு சிவ தீர்த்தத்தில் எழுகடலும் வரும்படி செய்தருளியது. ஒரு வேலை - ஒரு வேற்படையை; ஒரு சமுத்திரத்தை யென்பது வேறு பொருள். மகன் - உக்கிரகுமார பாண்டியர்; அவர் கடல் சுவற வேல்வித்தமையின், ‘கடலை வறிதாக்கினீர்’ என்றார். பவக்கடல் - பிறவிக்கடல்.
ஏழுகடலை மாமிக்கு ஈந்து, ஒரு கடலை மகனுக்கு ஈந்து, பூமிக்குள் கடலை வற்றச் செய்து, பவக்கடலையும் போக்கியதனால் கயல்கள் தாம் வாழ்தற்குரிய இடங்களைப் பெறாவாகி உம்மையடைந்தன; இது நியாயமே என்பது இச்செய்யுளின் கருத்து.
195. செக்கநாதரைத் தரிசித்து மயலுழந்த தலைவியின் நிலைக்கு இரங்கித் தோழி கூறியது.
நீர் ஓடிய குறு வெயர்ப்பு; வெயர்ப்பு - வேர்வை. நெருப்பு - வெம்மை. கண்ணீரோடு பீர் ஓடும் முலை; பீர் - பசலை. குறையோடு நிறைந்த உயிரும். அன்று, ஏ: அசை நிலைகள்; தளை = தள்ளை - தாய்; கட்டு. தள்ளையோடு தான் செல்லாத் தமிழளென்றது தானே தனித்துச் சென்றாளென்றவாறு; தாயோடு சென்றிருப்பின் இவை உண்டாதற்கு ஏடு இராதென்பது குறிப்பு. (பி-ம்.) ‘தன்னோடுந் தான் செல்லாத்’.
|