| நடையுமெழு துவைநிற்கு நிலையுமெழு துவைசொற்குள் | | நலமுமெழு துவைசித்ர ரதிபோல்வாள் | | இடையுமெழு துவைமுற்று மிலதொர்பொரு ளையுமொக்க | | எழுதிலெவ ருனையொத்த பெயர்தாமே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 199. | மேதகைய பலகலைபோர்த் தறம்வளருத் தமிழ்க்கூடல் | | விகிர்த கேண்மோ | | ஏதமினின் றிருவுருவொன் றீருருவாய் நின்றதினும் | | இறும்பூ தந்தோ | | போதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத் தொருவனிரு | | பூவை மார்க்குக் | | காதலனாய் மற்றுனக்கோர் காதலியாய் நிற்பதொரு | | |
நேரிசை வெண்பா 200. | காண்டகைய செல்வக் கடம்பவனத் தானந்த | | தாண்டவஞ்செய் தாண்டவர்நீர் தாமன்றே - பூண்டடியர் |
தலைவியின் நடை. முழுதும் இல்லாத்தொரு பொருளை எழுதும் வல்லமை உனக்கு உளதானால் இவள் நடை முதலியவற்றை எழுத இயலும் என்றாள்; அவை எழுத்தற்கு அரியனவென்பது கருத்து. எழுதின், எழுதுவையென இயைக்க.
199. பல கலை - போர்த்து - பலவகைக் கலைகளை உடையதாகி.. போர்த்து என்ற சொற்கிடக்கையால் கலையென்பதற்கு ஆடையென்று ஒரு பொருள் தொனித்தது: “பலகலையும் பொதி மதுரை” (204) என்பர். பின். மதுரையிற் பல கலையிருத்தல்: விகிர்த - வேறுபாடுதையோய்: இது பின் கூறும் செய்திகளுக்கேற்ப அமைந்த விளி. அர்த்த நாரீசுவர வடிவத்தையே திருவுரு வொன்று ஈருருவாய் நின்றதென்றார் (534.) இறும்பூது - ஆச்சரியம். அந்தோ; (வியப்பின்கட்குறிப்பு; ‘ஐயோவென்பது உவகைக்கண் வந்தது’ (திருச்சிற், 384, பேர்.) என்பதுபோல. புயல் வண்ணத்தொருவன் - திருமால். இரு பூவைமார் - திருமகளும்
|