அறுசீர்ச் சந்தவிருத்தம் 204. | உடையதொர் பெண்கொடி திருமுக மண்டலம் | | ஒழுகுபெ ருங்கருணைக் | | கடலுத வுஞ்சில கயல்பொரு மொய்ம்புள | | கடவுணெ டும்பதியாம் | | புடைகொள் கருங்கலை புனைபவள் வெண்கலை | | புனையுமொர் பெண்கொடியா | | வடகலை தென்கலை பலகலை யும்பொதி | | |
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 205. | வள்ளைவாய் கிழித்துக் குமுழ்மறிந் தமர்த்த | | மதர்ரிக் கண்ணியு நீயும் | | மழலைநா றமுதக் குமுதவாய்க் குழவி | | மடித்தளத் திருத்திமுத் தாடி | | உள்ளநெக் குருக வுவுந்துமோந் தணைத்தாங் | | குகந்தனி ரிருதிரா லுலகம் | | ஒருங்குவாய்த் தீருக் கொருதலைக் காமம் | | உற்றவா வென்கொலோ வுரையாய் |
ஆம். (பி-ம்.) ‘உறவான வேய்’. கன்றி - வருந்தி. தீ நிலா :202. வேனிலான் - காமன. தினம் இடைந்து இடை நொந்தபோல் - நாள்தோறும் மெலிந்து இடையானது நொந்ததுபோல. மனம் உடைந்தது - உள்ளம் உருகியது. (பி-ம்.) ‘மன மிடைந்தது’.
204. (சந்தக் குழிப்பு.) தனதன தந்தன தனதன தந்தன தனதன தந்தனனா.
பெண்கொடி - அங்கயற்கணம்மை; கருணைக் கடலை உதவும் கயல்; சில கயல்: சில - இரண்டு; கயலென்றது கண்களை. மொய்ம்பு - தோள். புடைகொள் - பக்கத்திலே கொண்ட. கருங்கலை - கரிய ஆடை; என்றது கடலை. அதனைப் புனைபவள் நிலமகள். வெண்கலை புனையும் ஓர் பெண்கொடியாகும்படி; உலக முழுதும் புகழ் பரவவென்பது கருத்து; நிலமகள் கலைமகளைப் போலத் தோற்றும்படி யென்பது வேறு பொருள். (பி-ம்.)’பெண் கொடியாம்’, ‘பலகலையும் பொலி’. மதுரைவளம்பதி கடவுளின் நெடும்பதி ஆகும் என்க.
205. (அடி, 1) வள்ளை: காது. குமிழ் : நாசி. கண்ணி - கண்ணையுடையவள் : உமாதேவியார். குழவியை மடிதலத்தில் இருத்தி; குழவி - முருகக் கடவுள். முத்தாடி - முத்தமிட்டு.
|