| வெள்ளிவெண் ணிலவு விரிந்தகோ டீரம் | | வெஞ்சுடர்க் கடவுளுங் கிடைத்து | | வீற்றிருந் தனைய விடுசுடர் மகுட | | மீக்கொளூஉத் தாக்கணங் கனையார் | | கள்ளவாட் கருங்கண் ணேறுகாத் திட்ட | | காப்பென வேப்பலர் மிலைச்சும் | | கைதவக் களிறே செய்தவக் கூடற் | | |
நேரிசை யாசிரியப்பா 206. | கட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு | | மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து | | செந்நா முற்றத்து நன்னடம் புரியும் | | பல்வேறு வன்னத் தொருபரி யுகைத்தோய் |
(2) (பி-ம்.) ‘எடுத்து மோந்து’. அணைத்து ஆங்கு. வாய்த்தீருக்கு - பெற்றவர்களாகிய உங்களுக்கு. இரு தலைக் காமம் - பட்சபாதம். உற்றவா - உண்டானவிதம். உலகமெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகத்திலுள்ளோர் யாவரும் பிள்ளைகளாயிருப்பவும், முருகக் கடவுளைமட்டும் மடியிலிருத்திப் பாராட்டுதல் பட்சபாதமன்றோ வென்றார் (670,) சிவபெருமானும் உமாதேவியாரும் முருகக் கடவுளைப் பாராட்டுதல்: 312, 449, 690.
(3) வெள்ளி வெண்ணிலவு - மிக்க வெண்மையையுடைய நிலவு; “வெள்ளி வெண்கடல்” (கம்ப. வீடண. 133.) கோடீரம் - சடையை. வெஞ்சுடர்க்கடவுளும் - சூரியனும். கிடைத்து - அணுகி. மகுடத்திற்குச் சூரியன் உவமை: “திருமுகத் திருக்கண் ணாகிச் சேர்ந்துரை நம்மு ணீயே, சுருதி சொ லெகினங் காணாச் சுடர் முடியுற்று வாழ்ந்தாய், ஒருவற வினியான் வாழ்வ லென்றொரு மதியைத் தள்ளி, மருவுசெங் கதிருற் றென்ன மாணிக்க மகுடஞ்சூடி” (தியாகராச. 3 : 12) மகுடத்தின்மேலே. தாக்கணங் கனையார் - தீண்டி வருத்தும் தெய்வத்தைப் போன்ற மகளிர்.
(4) கண்ணேறு - திருஷ்டி தோஷம். வேப்பலர் - வேம்பினது பூவை. கண்ணேறு படாதபடி வேம்பின் பூவைச் சூடுதல் வழக்கம். கைதவக் களிறு - பாண்டியர்களுள் ஆண்யானை போன்றவர்; கைதவன் - பாண்டியன்.
206. (அடி. 1-4) கட்புலம் கதுவாது - கண்ணாற் பார்த்தற்கு இயலாமல்; வேதம் எழுதாக்கிளவியென்பதை விளக்கியபடி. செவிப்புலம் புக்கு - கேள்வியளவாக நின்று; சுருதி யென்னும் பெயர்ப்பொருளை உணர்த்தியபடி. மன்னிடைத் துஞ்சி - மனத்தில் நிலைபெற்று; “மனவட்ட மிடுஞ் சுருதி வயப்பர்” (105) என்றார். முன்னும். வன்னம் - எழுத்து; ணிறமென்பது வேறு பொருள். ஒரு பரி - வேதமாகிய குதிரை.
|