| பெருவளஞ் சுரந்த விரிதமிழ்க் கூடல் | | இருநில மடந்தைக் கொருமுடி கவித்தாங் | | கிந்திர னமைத்த சுந்தர விமானத் | | தருள்சூற் கொண்ட வரியிளங் கயற்கண் | 25 | மின்னுழை மருங்குற் பொன்னொடும் பொலிந்தோய் | | துரியங் கடத துவாத சாந்தப் | | பெருவெளி வளாகத் தொருபெருங் கோயிலுள் | | முளையின்று முளைத்த மூல லிங்கத் | | தளவையி னளவா வானந்த மாக்கடல் | 30 | நின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென | | மன்பெருஞ் சிறப்பின் மதிநலங் கொளினே | | பேதைமைப் பாலரே பெரிது மாதோ | | வேத புருடனும் விராட்புருடனுமே | | இனையநின் றன்மைமற் றெம்ம னோரும் | 35 | நினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின் | | வாழிய பெருமநின் றகவே | | வாழியெம் மனனு மணிநா வும்மே. |
மதுரைக் கலம்பகம் முற்றிற்று.
யவற்றையும் பெய்தன. வாரி - நீர். (பி-ம்.) ‘பெயும் பெயல்’. பல் பெயல் தலைஇ - பல மழையைப் பெய்து.
(22-5) இந்திர விமானம் நிலமகளின் முடிபோல் விளங்குகின்றது. நுழை மருங்குல் - நுண்ணிய இடை. பொன் : 120.
(26-9) வளாகம் - பரப்பு. மூல்லிங்கம் : 140. அளவை - பிரமாணம் (600.) கடல் - விளி. கடலாகிய நின் (30) என்று கூட்டுதலும் ஆம்.
(30-33) மன் பெருஞ் சிறப்பின் - தம்பால் நிலைபெற்ற பெரிய சிறப்பினால். (பி-ம்.) ‘சிறப்பிற்றம்’. வேதபுருடனும் விராட்புருடனும் பேதைமைப் பாலர்; அவர்களால் நின் தன்மை நிகழ்த்துதற்கு அரிதென்றபடி; 466.
(34-7) புரிதலின் - விரும்பி அருள் செய்தலின். (பி-ம்.) ‘வாழியெம்பெரும’. தகவு - தகுதி; சிறப்பு. வேதபுருடன் முதலியோருக்கும் சொல்லுதற்கு அரிய நின் பெருமையை எம்மனோர் பாடுவது எம் ஆற்றலால் அன்று; நின் தகவினால் அமைந்தது அது; ஆதலின் நின் தகவு வாழ்க. நின் பெருமையை நினைத்தற்குக் கருவியாகிய மனமும் பாடுதற்குக் கருவியாகிய நாவும் வாழி; “வாழியவன் சீர்பாடும் வாய்” (490.)
|