110. | கந்திப் பொதும்பரெழு காரலைக்குஞ் சீரலைவாயச் | | செந்திப் பதிபுரக்குஞ் செவ்வேளே - சந்ததமும் | 111. | பல்கோடி சன்மப் பகையு மவமிருந்தும் | | பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி | 112. | பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசுமடற் | | பூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீதகலா | 113. | வெவ்விடமுந் துட்ட மிருகமுத லாமெவையும் | | எவ்விடம்வந் தெம்மை யெதிர்ந்தாலும் - அவ்விடத்திற் | 114. | பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும் | | அச்ச மகற்று மயில்வேலும் - கச்சைத் | 115. | திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா | | றருள் விழியு மாமுகங்களாறும் - விரிகிரணம் | 116. | சிந்தப் புனைந்த திருடிக முளோராறும் | | எந்தத் திசையு மெதிர்தோன்ற - வந்திடுக்கண் | 117. | எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந் | | துல்லாச மாக வுளத்திருந்து - பல்விதமாம் |
110. கந்திப் பொதும்பர் - கமுகஞ்சோலை, எழு கார் - எழுகின்ற மேகத்தை, சீரலைவாய்ச் செந்திப்பதி - திருச்சீரலைவாயாகிய திருச்செந்தூர்; சிறப்புடையகடற்கரையிடத்தே உள்ள திருச்செந்தூரென்பதும் பொருந்தும். ஜயந்தி என்பது செந்தியென வந்ததென்பர். (பி-ம்.) ‘செந்திற்பதி’. செவ்வேள்: முருகக் கடவுள் சிவந்த மேனியை யுடையவரென்பு, “செய்யன்” (முருகு. 206) என்பதனால் அறியலாகும்.
111. இதுமுதல் வேண்டுகோள் கூறப்படும்.
அவமிருத்து - அகால மரணம். விக்கினம் - இடையூறு.
112. பாதகம் - மகாபாதகம், அதிபாதகம், உபபாதகமென்னும் மூவகைப் பாதகங்கள். செய்வினை - சூனியம் முதலியன; ஏவலென்பர். பசாசு: பைசாச மென்பதன் சீதைவு, தீ நீரும் - தீயும் நீரும். படை - ஆயுதம்.
113. எம்மையென்றது அடியார்களையும் உளப்படுத்தியபடி.
114. அயில் வேல் - கூர்மையையுடைய வேலாயுதம்.
115. சீறடி - சிறிய திருப்பாதங்கள்.
117. உல்லாசமாக - மகிழ்ச்சியாக; “உல்லாச நிராகுல யோகவிதச், சல்லாப வினோதனு நீயலையோ” (கந்தரனுபூதி.)
|