118. | ஆசுமுத னாற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப் | | பேசுமியல் பல்காப் பியத்தொகையும் - ஓசை | 119. | எழுத்துமுத லாமைந் திலக்கணமுந் தோய்ந்து | | பழுத்த தமிழ்ப்புலமை பாலித் - தொழுக்கமுடன் | 120. | இம்மைப் பிறப்பி லிருவா தனையகற்றி | | மும்மைப் பெருமலங்கண் மோசித்துத் - தம்மைவிடுத் | 121. | தாயும் பழைய வடியா ருடன்கூட்டித் | | தோயும் பரபோகந் துய்ப்பித்துச் - சேய | 122. | கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் | | ட்டியேற்கு முன்னின் றருள். |
திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பாமுற்றிற்று.
118. நாற்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி, அட்டாவதானம் - ஒரே சமயத்தில் எட்டுவகை வினாக்களுக்கு விடையளித்தல்; அவதானம் - கவனம். இயல் - இலக்கணம். “நாற்கவியும், பாடும் பணியிற் பணித்தருள்வாய்”, “சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல, நல்வித்தை யுந்தந்தடிமை கொள்வாய்” (701, 707) என இவ்வாசிரியர் கலைமகள் மாட்டும் நாற்கவி, அவதானம் முதலியவற்றை விரும்பித் துதிப்பர். ஓசை - ஒலி.
119. எழுத்து முதலாம் ஐந்து இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென்பவற்றின் இலக்கணம்.
120. இருவாதனை - அகப்பற்று, புறப்பற்று, மும்மைப் பெருமலங்கள் - ஆணவம், கன்மம், மாயை. மோசித்து - நீக்கி; 69. தம்மை விடுத்து - பசுபோதம் நீங்கி; “தன்னை யிழந்தவர் முன், யானென்று சென்றிடுங் காசிப்பிரான்” (682.)
121. பழைய அடியார் - தொன்றுதொட்டு அடிமைத்திறம் பூண்டோர்; “பழைய தொண்டர்கள்” (தே. திருஞா. திருக்கண்டியூர்); “ஐயா பழவடியோம்” (திருவா.) அடியாருடன் கூட்டி: “அடியேனுன், அடியார் நடுவுளிருக்கு மருளைப் புரியாய்” (திருவா.) பரபோகம் - பேரின்பம். துய்ப்பித்து - நுகரச் செய்து, சேய சிவந்த; நண்ணற்கரிய எனலுமாம்; சேய்மை - தூரம்.
122. கடி ஏற்கும் - மணத்தைக் கொண்ட.
|