219. | முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம் | | கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற் | | கல்லுந் தகருந் தகரா கனங்குழாய் | | |
220. | தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை | | அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும் | | கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் | | எற்றே யிவர்க்குநா மென்று. |
221. | கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு | | செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் | | குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும் | | தலைவணங்கித் தாழப் பெறின். |
கல்வி நலன் - கல்வியாகிய அழகு. முழுமணிப்பூண் - முற்றும் மணிகளால் அமைக்கப்பட்ட ஆபரணம். “குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து, நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற், கல்வி யழகே யழகு” (நாலடி, 131.)
219. கல்விச் செருக்கு ஆகாதென்கின்றார்.
களியற்க - செருக்கு அடைதலை ஒழிக. கொல் உலைக் கூடத்தினால் - கொல்லனது உலைக்களத்திலுள்ள சம்மட்டியால். (பி-ம்.) ‘கல்லந் தகரும்’ பின் இரண்டடிகள் ஒட்டணி. பெரிய கல்வியுடையாரும் சிறிய கல்வியுடையாரால் தோல்வியுறுவரென்பது குறிப்பு; “சிலகற்றார் கண்ணு முளவாம் பலகற்றார்க், கச்சாணி யன்னதோர் சொல்” (அறநெறிச். 43.)
220. செல்வருக்குத் திருப்தியும், கல்வியுடையாருக்கு மேன்மேலுங் கற்றல் வேண்டுமென்னும் ஆர்வமும் வேண்டுமென்று இதனாற் கூறுவார்.
தம்மின் மெலியாரை - தம்மைக் காட்டிலும் செல்வத்தில் தாழ்ந்தவர்களை. அம்மா : வியப்பிடைச்சொல். கருத்து அழிக - உள்ளம் உடைக. (பி-ம்.) ‘கற்ற வெல்லாம்’. எற்றே - எவ்வளவு தாழ்ந்தது. இவர்க்கு - இவர் கற்றவற்றிற்கு. நாம் கற்றதெல்லாம் எற்றேயென்று இயைக்க. என்று கருத்தழிக.
221. கற்றோரும் செல்வரும் வணக்க முடையராதல் வேண்டுமென்று கூறுவர்.
இல்லார் - கல்வியும் செல்வமும் இல்லாதார். தம் முன்னர் கற்றோரும் செல்வருமாகிய தங்களுக்கு முன். நிற்பபோல் - நிற்றலைப்போல. தாமும்; உம்மை எச்சப் பொருளது வணங்குவதற்கு உபாயம் கூறியபடி. “அறிவோர்க் கழகு கற்றணர்ந்தடங்கல்” (வெற்றிவேற்கை) என்பதனால்
|