பக்கம் எண் :

220குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

306.
கற்றாற் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப் 
பெற்றது கொண்டு மனந்திருத்துப் - பற்றுவதே 
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து 
நிற்பாரே நீணெறிச்சென் றார்.    
(100)

307.
ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்கூவார் தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள்.    
(101)

நீதிநெறி விளக்கம் முற்றிற்று.


    306. வீடு பெற முயல்வார் தன்மை கூறப்படும்.

    கற்றாங்கு - நூல்களிற் படித்தவாறே. அடக்கம் கல்வியின் பயனாகும்: “கற்றறிந்தார் கண்ட தடக்கம்” (பழமொழி, 243.) தீது ஒரீஇ - தீய செயல்களை விலக்கி. தீதொரீஇ நன்றாற்றியென்றது, “விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்” (223) என்பதை வற்புறுத்தியபடி. பற்றுவதே - எல்லாரும் பற்றுவதாகிய பரம்பொருளை. பற்றுவதே பற்றுவதே யென்னும் அடுக்கு, “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” (குறள். 297) என்றதுபோல் நின்றது. பணியற நின்று - எல்லாச் செயலும் அடங்கும்படி நின்று: “என்னுடைய, செயன்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (திருவா.) ஒன்று : பரம்பொருள்.

    307. ஐயம் - அதுவோ இதுவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்கும் உணர்ச்சி. திரிபு ஒன்றை மற்றொன்றாகத் துணிதல். அளந்து - காட்சி முதலிய பிரமாணங்களால் அளந்து. உத்திகளால் தெளிந்து; உத்தி - யுக்தி. மெய்யுணர்ச்சிக்்கண்விழிப்ப - சத்திய ஞானமாகிய கண் விழித்திருப்ப. தூங்குவார் - உலக நுகர்ச்சியை அறியாதிருப்பவர்; “விழித்துறங்குத் தொண்டர்” (76) என்றார் முன்னும். தீர்ந்த பொருள் - முடிந்த பொருளாகும்.