| தன்பாக நின்றிருநோக் கலைதோய்ந்துக் | | திருநிறம்பவே றாகை யாலப் | | பொன்பாக மிதுவெனவு நின்பாக | | |
நேரிசை யாசிரியப்பா 312. | ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள் | | வெயில்கண் டறியா வீங்கிருட் பிழம்பிற் | | புயல்கண் படுக்கும் பூந்தண் பொதும்பிற் | | காவலர்ப் பயந்து பாதபத் தொதுங்கிய | 5 | இருவே றுருவிற் கருவிரன் மந்தி | | பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை | | முன்னுறக் காண்டலு முளையெயி றிலங்க | | மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால் | | தொடுத்தபொற் சுளைபல வெடுத்துவாய் மடுப்பது | 10 | மானிட மடங்க றூணிடைத் தோன்றி | | ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து |
என்பையும் ஆகத்தையும் நகுதலையையும் ஒட்டையும் அணிந்த; ஆகமென்றது முழு என்பாகிய கங்காளத்தை; ஓடு - ஆமையோடு. தலைவி - உமாதேவியார். பொன் என்றதும் அத்தேவியாரையே. அம்பிகையின் கரிய திருவிழியின் நிறத்தால் சிவபெருமான் திருமேனி கரிய நிறத்தையும், சிவபெருமானது திருவிழியின் செந்நிறத்தால் உமாதேவியாரின் திருமேனி செந்நிறத்தையும் அடைந்தமையின் மயக்கமுண்டாயிற்றென்றார். இருவரும் ஒருவரை யொருவர் நோக்கி இன்புறுவதைக் குறிப்பித்தவாறு.
312. (1-14) பலாப்பழத்தைக் கீண்டு சுளையை உண்ணும் மந்தி நரசிங்க மூர்த்தியைப் போலத் தோற்றுமென்பார். செங்கதிர்க்கடவுள் - சூரியன்; கடவுளத் வெயில். பிழம்பு - திரட்சி. பொதும்பு - மரச்செறிவு; “வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374, மணி. 4 : 5); “வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பு” (பெருங். 1.33 : 27.) காவலர் - பலாப்பழத்தைக் காப்பவர்கள் (குறுந். 342 : 1-3, 385 : 1-2.) பாதபம் - மரம். இருவேறுரு - மனித இயல்பும் விங்களின் இயல்பும் ஒருங்கு அமைந்த உருவம். மந்தி - பெண் குரங்கு. வருக்கை - பலாப்பழம். முளை எயிறு - நாணல் முளையைப் போன்ற கூரிய பல். வகிர்து - பிளந்து. மானிட மடங்கல் - நரசிங்கம்.ஆடகப் பெயரின் அவுணன் - இரணியன்; ஆடகம் - பொன். (பி-ம்.)'நீடுபைங்'. பலாப்பழத்துக்கு இரணியனும், அதனுள்ளிருக்கும் சக்கைக்குக் குடரும், சுளைக்கு நிணமும், குரங்குக்கு நரசிங்க
|