| கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம் | | பொங்குற்ற புன்மாலைப் போது. |
கட்டளைக் கலித்துறை 314. | போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்போலெந்தாய் | | சூதொன்று கொங்கைச் சுவடென்ப ராற்றொல் களிற்றுரிவை | | மீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகள் வெண்மருப்பால் | | ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 315. | இணங்குகம லாலயமா லிதயத்திற் பொலிந்ததியா | | கேச ரம்பொற் | | கணங்குழைமண் மகளிதய கமலத்தும் பொலிதலினைக் | | கமல மான |
மடைந்து கரிய ஆடையாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் அமைகின்றன. வெண்படம் - வெள்ளாடை; படம் - ஆடை. புன் மாலை - செக்கர் நிறத்தையுடைய மாலை; புன்மை - சிவப்பு (பட். 90, ந.); புன்மாலை - ஒளியிழந்த மாலையெனலுமாம்.
314. சிவபெருமானு மேலுள்ள யானைத்தோலைக் கண்டு அப்பெருமானை ஒரு யானையென்றெண்ணி விநாயகர் பாய, அவருடைய கொம்பிரண்டும் பட்டதனால் உண்டான சுவடுகள் இரண்டையும் உமாதேவியாருடைய கொங்கையினால் உண்டான சுவடுகளென்பர். இது தற்குறிப்பேற்ற அணி.
கமலேசரது மார்பில். எம் தாய் - உமாதேவியாரது. சூது - சூதாடுதற்கு அமைந்த காய்; ஆகுபெயர். உரிவை - தோல். ஒன்றுவ - பொருந்துதலை. வெவ்விய கோபத்தையுடைய மாவென்றது யானையை; மா - விலங்கு; மாமுகன் - விநாயக்க் கடவுள். இணைஞ் சுவடு - இரட்டைச் சுவடுகள். இச்செய்யுளிலமைந்த கருத்தை வேறொரு வகையாக இந்நூலாசிரியரே 546-ஆம் செய்யுளில் அமைத்துள்ளார்.
315. தியாகேசர் திருமாலின் இதயத்தும் அவர் தேவியாராகிய மண் மகளின் இதயமாகிய திருவாரூரிலும் விளங்குதலின் அவ்விருவர் உள்ளமும் ஒத்த தன்மையனவாம்.
கமலம் ஆலயம் மால் - நீரை இருப்பிடமாக்க் கொண்ட திருமால்; நீரெனடறது கடலை. அம்பொற் கணங்குழை மண்மகள் - அழகிய பொன்னாலாகிய திரண்ட குழையென்னும் காதணியையுடைய பூதேவி. அழகிய பொன்னின் தொகுதியையும் தளிர்களையும் தன்பால் உடைய பூமிதேவி; குழை, இங்கே மரஞ்செடி கொடிகளுக்கு ஆகுபெயராய் நின்றதாக்க் கொண்டு, தன் அகத்தே பொற்புதையல்களையும் புறத்தே தாவரங்களை
|