| மணங்கமழ்பங் கயத்தடஞ்சூழ் கமலைகம | லாலயப்பேர்வாய்த்த தான்மற் | | றணங்கனையா ரிதயமுந்தம் மருட்கொழுந | | | |
நேரிசை யசிரியப்பா 316. | தானமால் களிறு மாநிதிக் குவையும் | | ஏனைய பிறவு மீகுந ரீக | | நலம்பா டின்றி நாண்டுறந் தொரீஇ | | இலம்பா டலைப்ப வேற்குந ரேற்க | 5 | புரவலர் புரத்தலு மிரவல ரிரத்தலும் | | இரவே றியற்கையு மிவ்வுல குடைத்தே | | அதா அன்று | | ஒருகா லத்தி லுருவமற் றொன்றே | | இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப | | வலப்பா லிரத்தன் மாநிலத் தின்றே |
யும் உடையவளென்று கொள்க. மண்மகளிதய கமலமென்றது திருவாரூரை (327); “மோதினிக், காதன் மங்கை யிதய கமலமா, மாதொர் பாகனா ராரூர் மலர்ந்ததால்” (பெரிய. திருமலைச். 33.) (பி-ம்.) ‘கமலத்திற்’. அக்கமலம் மான - அந்த இதய கமலத்தை ஒப்ப. கமலாலய மென்னும் பெயர் திருவாரூருக்கு வந்ததன் இயல்பான காரணம் திருமகள் இங்கே தங்கித் தவம் புரிந்ததாகும்; கமலா - திருமகள். இங்கே அதற்கு வேறொரு காரணம் கற்பித்தார். கற்புடை மகளிர் உள்ளக் கருத்தும் கணவர் உள்ளக் கருத்தும் ஒன்றாயிருத்தல் இயல்பாதலின் திருமாலும் பூமிதேவியும் தம் இதயத்தில் தியாகப்பெருமானை வைத்துள்ளாரென்றார். தான், ஏ : அசைநிலைகள்.
316. அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறித்த செய்யுள் இது. உலகத்தில் ஈகையாளரும் இரவலரும் தனித்தனியே இருப்பர்; இவ்வுருவத்தில் ஒருபால் ஈதலும் மற்றொருபால் இரத்தலும் அமைந்தமை வியப்பாகும்.
(1-6) தானமால் களிறு - மதத்தையுடைய பெரிய நானை. கஜாந்த ஐசுவரியம் எனச் செல்வத்திற்கு யானையித் தலைவரம் பாக்குதலின் அதனை முதலிற் கூறினர். நலம்பாடு - நன்மை உண்டாதல். ஒரீஇ - நீக்கி. இலம்பாடு அலைப்ப - வறுமை வருத்த. (பி-ம்.) ‘இலம்பாடின்றி’. ஏற்குநர் - இரப்போர். புரவலர் - ஈகையுடையோர். புரத்தல் - தம்பால் இரந்தாருக்கு ஈந்து பாதுகாத்தல். அதாஅன்று - அங்ஙனம் அல்லாமல்.
(7-9) உருவம் ஒன்றே ஒரே காலத்தில் அறம் வளர்ப்பதும் இரத்தலும் இன்று. மற்று: அசைநிலை. இடப்பால் - அம்பிகையின் பாகம். வலப்
|