10 | விண்டொட நிவந்த வியன்றுகிற் கொடிகள் | | மண்டலம் போழ்ந்து மதியக டுடைப்ப | | வாணிலா வமுதம் வழங்கியக் கொடிகள் | | வேனிலிற் பயின்ற வெப்பம தாற்றுபு | | கொடியா ரெத்துணைக் கொடுமை செய்யினும் | 15 | மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும் | | பன்பணி மாடப் பொன்மதிற் கமலைக் | | கடிநகர் வைப்பினிற் கண்டேம் | | வடிவ மற்றிது வாழிய பெரிதே. |
நேரிசை வெண்பா 317. | பெருமான் றமிழ்க்கமலைப் பெம்மான்கைம் மானும் | | கருமா னுரியதளுங் கச்சும் - ஒருமானும் | | சங்கத் தடங்காதுந் தார்மார்புங் கண்டக்கால் | | |
பால் - சிவபெருமான் பாகம்; “இல்லை யென்பதிலையோர் மருங்கிலே - யெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே” (688) என்பர் பின்.
(10-15) மாடத்தில் கட்டிய கொடிகளின் செயல் கூறுவார். மண்டலம் - வட்டம். நிலா : எழுவாய். கொடியார் - துவசங்கள், கொடியவர்; மதியார் - சந்திரன், அறிவுடையோர்; சிலேடை. தன் வயிற்றைக் கீண்டு வருத்திய கொடிகளின் கொடுமையை உளங்கொள்ளாது அமுதம் பொழிந்து அக்கொடிகளின் வெப்பத்தை ஆற்றிய மதியின் செயல் அறிஞர் செயலைப் புலப்படுத்தியது; “இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக் கால், என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987) என்பதை ஓர்க.
(16-8) மணிமாடத்தையும் மதிலையும் உடைய கமலை. கண்டேம் - ஒரே உருவத்தில் ஒருபால் அறம் வளர்ப்ப மற்றொரு பால் இரத்தலைக் கண்டேம். மற்று: அசைநிலை.
317. சிவபெருமானைத் தரிசித்த தலைவி கூறியது.
பெம்மானது கையிலுள்ள மானும், கருமான் உரி அதள் - யானையை உரித்த தோல். ஒரு மான் : உமாதேவியார். சங்கம் - குழை, தார் - மார்பிலணியும் மாலை. அவா அங்கத்தில் அடங்காது; அங்கம் - மனம்.
“கையடைந்த மழுமானுஞ் செழுமானு முழைமானுங் கயலுமானும், மையடைந்த விழிமானு முடனாக வருணேசர் வருகுவாரே” (அருணைக்கலம். 85) என்பதிலும் பலமான்கள் கூறப்படும்.
|