பக்கம் எண் :

228குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
318.
வாவியம் போருக்ஞ் சூழ்கம லேசர்புள் வாய்கிழித்த
தூவியம் போருகந் தோறுநின் றோர்துணைத் தாளடைந்த
ஆவியம் போருகந் தாயிரங் கூற்றுடம் றாலுமஞ்சேல்
நாவியம் போருக நன்னெஞ்ச மேயவர் நாமங்களே.    
(11)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
319.
நாம வேற்படைக் கடவுளைப் பயந்தருள்     
   நங்கைதென் கமலேசர்     
வாம பாகத்தைக் கொளவலப் பாகநீர்     
   மங்கைகொண் டனள்போலாம்     
தாம நீற்றொளி தன்னிறங் காட்டவெண்     
   டலைநிரை நுரைகாட்டக்     
காமர் பூங்கொடி மடந்தையர் மதர்விழிக்     
   கயலுலா வரலாலே.    
(12)

    318. வாவியில் அம்போருகம் சூழ்ந்த; அம்போருகம் - தாமரை. புள்வாய் கிழித்த தூவி அம்போர் - பகாசுரனாகிய புள்ளின் வாயைக் கிழித்த திருமாலாகிய மென்சிறகையுடைய அம்பை உடையோர்; அம்பு விரைவாகச் செல்லுதற்பொருட்டு அதன் கோலில் சிறகு அமைக்கப்பட்டிருக்கும். உகந்தோறும் நின்றோர் - எல்லா யுகங்களிலும் அழிவில்லாமல் நிலைபெற்று நின்றவர். ஆவி ; விளி. அம்ப போர் உகந்து ஆயிரம் கூற்று உடன்றாலும்; கூற்று - யமன். அஞ்சேல் - பயப்படாதே. நா இயம்பு - நாவே கூறுவாயாக. நன்னெஞ்சமே ஓருக; ஓருக - தியானம் செய்க. அவர் நாமங்களை நாவே இயம்பு, நெஞ்சமே ஓருக என்க.

    319. நாம வேற்படை - அச்சத்தைத் தரும் வேலியாத்ததையுடைய கடவுள் - முருகவேள். நங்கை - உமாதேவியார். நீர் மங்கை - கங்கை. தாம நீற்றொளி - விளக்கத்தையுடைய விபூதியின் ஒளி. தன்னிறம் - கங்கையின் நிறத்தை; அது வெண்ணிறமுடையது; “தம்மேனி வெண்பொடிநாற் றண்ணளியா லாரூர்ர், செம்மேனி கங்கைத் திருந்தியே” (345) என்பர் பின். வெண்டலை நிரை - தசையிழந்த தலைகளின் வரிசை; இதற்கு நுரை உவமை. கொடிபோன்ற மடந்தையர். விழியாகிய கயல். விழிக்கயல் உலாவரலாவது அம்மடந்தையர் எப்பொழுதும் சிவபிரானது திருமேனியே உற்று நோக்குதல்; “காமிக்கு மடந்தையர்கட் கயலெல்லா முமையடைதல் கணக்கே யன்றோ” (194) என்றார் முன்னும். நீறும் வெண்டலையும் மகளிர் பார்வையும் இறைவன் பாகமாகிய வலப்பாலுக்கு உரியனவாதலிம் அப்பாகத்தை மட்டும் கங்கை கொண்டாற் போன்றதென்றார்.