நேரிசை யாசிரியப்பா 320. | வருமுலை சுமந்து வாங்கிய நுசுப்பிற் | | புரிகுழன் மடந்தையர் பொன்னெடு மாடத் | | தொண்கதிர் வயிரமுந் தண்கதிர் நீலமும் | | சேயொளி பரப்புஞ் செம்மணிக் குழாமும் | 5 | மாயிரு துரந்து மழகதி ரெறிப்பச் | | சுரந்தி முதல வரந்தி மூன்றும் | | திருவநீண் மருகிற் செல்வது கடுப்ப | | ஒள்ளொளி த்தும்பு மொண்டமிழ்க் கமலைத் | | தெள்ளமு துறைக்குந் திங்களங் கண்ணித் | 10 | தீநிறக் கடவுணின் கான்முறை வணங்குதும் | | கூற்றெனப் பெயரிய கொடுந்தொழி னுளையன் | | ஊற்றமில் யாக்கை யுவர்நீர்க் கேணிப் |
320. யம்பந்ததினின்றும் உய்யக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகின்றார்.
(1-8) திருவாரூரிலுள்ள மாடங்களிற் பதித்த வயிரம், நீலமணி, மாணிக்க மென்பவற்றாலுண்டான மூவகைச் சோதிகளும் ஒருங்கே வீதியிற் பரந்து திரிவேணி சங்கமுத்தை ஒத்தனவென்பர்.
வருமுலை - தோன்றி வளரும் முலை. வாங்கிய நுசும்பின் - உள்வாங்கிய இடையையுடைய. மடந்தையர் வாழும் மாடம். சேயொளி - செந்நிற ஒளி. மாயிருள் - பேரிருளை. துரந்து - ஓட்டி. (பி-ம்.) ‘கதிரெறிப்பன’. சுரநதி - கங்கை; இது வெண்ணிறமுடையது. ஏனைய இரண்டு ந்திகள், நீல நிறமுடைய யமுனையும் செந்நிறமுடைய வாணியுமாம். கங்கை யமுனை வாணி மூன்றும் கூடி இடத்தைத் ‘திரிவேணி சங்கமம்‘ என்பர். திருவம் - செல்வம். கடுப்ப - ஒப்ப. ஒள்ளொளி - மிக்க ஒளி. கமலையில் உள்ள திரிவேணி சங்கம்ம் : 345.
(9-10) உறைக்கும் - துளிக்கும். (பி-ம்.) ‘தெள்ளமுதிறைக்கும்’. திங்களாகியஅழகிய கண்ணியை யணிந்த; “மாதர்ப் பிறைக்கண்ணியானை” (தே.) தீயின் நிறத்தையுடைய கடவுள். காலை முறைப்படி வணங்கும்.
(11-17) யமனை வலைஞனாக உருவகம் செய்வர்.
கொடுந்தொழில் நுளையன் - உயிரை உடலினின்றும் பிரிக்குங் கொடிய செயலையுடைய வலைஞன்; “கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப”, (மணி.) ஊற்றம் - வன்மை. யாக்கையாகிய உவர்நீரையுடைய
|