பக்கம் எண் :

230குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

புலத்தலை யுயிர்மீ னலைத்தன்ன் பிடிப்ப
ஐஎளி பித்தென வமைத்துவைத் திருந்த
15
முத்தலைத் தூண்டி றூண்டி யததலை
வாழ்நாண் மிதப்பு நோக்கித் தாழா
தயிறலைத் தொடங்கி யெயிறலைத் திருத்தலிற்
றள்ளா முயற்சி தவறுபட் டொழிந்தென
வெள்குறீஇ மற்றவன் விம்மித னாக
20
அருட்பெருங் கடலினவ வாருயிர் மீனம்
கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும்
பரமா னந்தத் திரையொடு முலாவி
எய்தரும் பெருமித மெய்த
ஐயநின் கடைக்க ணருளுதி யெனவே.    
(13

கேணி; யாக்கை பிறருக்கு உதவாதாகலின் அதனை உவர் நீர்க்கேணியாக்கினர். பலமென்னும் தலையையுடைய உயிராகிய மீன்; புலம் - பொறி; அறிவுமாம். பிடிப்ப - பிடிக்கும் பொருட்டு. ஐ - சிலேட்டும்ம். வளி - வாயு. பித்து - பித்தம். இம்மூன்றும் உயிராகிய மீனைப் பிடிக்க உதவும் தூண்டிலிலுள்ள மூன்று முட்கள். உயிர் நீங்குதற்குக் காரணமாக வரும் நோயாக்கு இம்மூன்றன் நிலை மாற்றமே ஏதுவாதலின் இவற்றைத் தூண்டில் முள்ளென்றார் (530); “மிகினுங் குறையின் நோய்செய்யு நூலோர், வளிமுதலா வெண்ணிய மூன்று” (குறள், 941.) அத்தலை - அவ்விடத்தில். வாழ்நாளாகிய மிதப்பு; மிதப்பு - நீரின்மேல் மிதக்கும் நெட்டித் தக்கை. ‘தூண்டிற் காரனுக்கு மிதப்பிலே கண்’ என்பது பழமொழிநாதலின் ‘மிதப்பு நோக்கி’யென்றார். அயிறலைத் தொடங்கி - உண்ணுதற்குத் தொடக்கம் செய்து. எயிறு அலைத்து இருத்தலின் - பல்லைக் கடித்துகொண்டு ஆயத்தனாக இருத்தலினால்.

    (18-24) ஒழிந்தென - ஒழிந்ததென. (பி-ம்.) ‘பட்டழிந்தென’ வெள்குறீஇ - வெட்கமுற்று. விம்மிதன் - ஆச்சரியமடைந்தவன்; ‘எல்லா மீன்களும் போல இஃது இல்லையே!’ என்று வியப்பு. அருட்பெருங்கடலின் - நின் அருளாகிய நன்னீரையுடைய பெரிய கடலில். கருக்குழி கழிய - கருப்பக்குழி ஒழிய; பிறவி நோய் நீங்கவென்றபடி. பரமானந்தமாகிய அலை. பெருமிதம் - வீரம். கடைக்கண் - கடைக்கட் பார்வை; ஆகுபெயர். பிறவிக் குழியினின்றும் நீங்கி நின் கருணைக்கடலிலுள்ள பேரின்ப அலையில் உலாவ அருள்வாயாக வென்றார்.

    அருளுதியென வணங்குதும் (10) என்க.